Wednesday, March 6, 2019

இன்று வடக்கில் மேரி ஆன் ஹாகன்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஆன் ஹாகன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவர் நேற்றைய நாளில் நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஹாகன் கலந்துரையாடியுள்ளதாக நோர்வே உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஆன் ஹாகன் , இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என்று, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. நாட்டில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை மீட்கும் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகளுக்கு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு, நோர்வே அரசாங்கம் எண்ணம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com