Tuesday, March 5, 2019

புலம்பெயர் தமிழர் வியர்வை சிந்தி உழைத்த பணம் கண்ணகி நகர் கழிவு நீர் ஆற்றில் கண்டு பிடிப்பு.

விடுதலைப் போராட்டத்திற்கென புலம்பெயர் தமிழ் மக்கள் தமது வியர்வை சிந்தி உழைந்த பணத்தை வாரி வழங்கினர். புலிகள் மேற்கொண்ட யுத்தத்திற்கு இப்பணத்தை கொண்டு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.

கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களில் பெரும்பகுதி இறுதியாக இலங்கை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது யாவரும் அறிந்த விடயம். அதற்கும் அப்பால் புறமுதுகு காட்டி ஓடிய புலிகள், ஆயுதங்களை ஆற்றிலும் குளத்திலும் கடலிலும் வீசு விட்டு ஓடித்தப்பினர்.

அவ்வாறு வீசி ஏறியப்பட்ட வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் சில இன்று கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வெடி பொருட்கள் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கராயன் பொலிஸ் அதிகாரிகள் குழு நீதிமன்ற அனுமதியை பெற்று விசேட அதிரடிப்படையினர் மூலம் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

எல்எம்ஜி ரவைகள் ஒரு தொகுதி, மோட்டார் எறிகனை ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழ் மக்களின் வியர்வையை கொண்டு புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்து அவ்வாயுதங்களை பயன்படுத்துவதற்காக வன்னி மற்றும் படுவான்கரை பிரதேச சிறார்களை பலாத்காரமாக படையில் இணைத்தனர். ஆனாலும் அவ்விளைஞர்கள் யுத்தம் வந்தபோது ஆயுதங்களை வீசிவிட்டு ஓடித்தப்பினர் என்பதற்கான சாட்சியங்களே இவையாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com