Saturday, May 18, 2013

13 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினான் பிக்கு!

13 வயது சிறுவன் ஒருவனை ஓரினச் சேர்க்கையில் உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான பிக்கு ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெப்பத்திகொல்லாவ பகுதியிலுள்ள விகாரையொன்றின் தேரரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் மதவழிபாட்டிற்காக விகாரைக்கு சமுகமளித்த சந்தர்ப்பத்தில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட பிக்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Read more...

களம் குதிக்கிறார் சந்திரிக்கா.... 'எங்கள் தேசிய முன்னணி' சந்திரிக்கா வசம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இருவருக்குமிடையே, நவீன அரசியல் முன்னணியை உருவாக்குவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ரோமில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு கட்டியெழுப்பப்படவுள்ள புதிய அரசியல்முன்னணியின் தலைமைத்துவத்தை சந்திரிக்கா அம்மையார் தக்கவைத்துக்கொள்ளவுள்ளதாகவும், அவரது மகன் விமுக்தி குமாரத்துங்க அதன் அமைப்பாளராக செயற்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தேர்தல் திணைக்களத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கு இடைஞ்சல்கள் எழுந்தால், அதற்காக மங்கள சமரவீரவின் 'எங்கள் தேசிய முன்னணி' கட்சியை முன்னிறுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

(கேஎப்)

Read more...

பிரபாகரன் நாட்டைவிட்டு ஓடிவிட்டதாக என்று யார் சொல்வது? கைரேகை சாட்சி சொல்கிறது...!

தமிழ்நாட்டு பொலிஸார் பெற்றுத்தந்த பிரபாகரின் கைரேகையும், இறுதிப் போரின் போரின் கண்டெடுக்கப்பட்ட பிரபாகரனின் சடலத்திலிருந்த கைரேகையும் ஒத்தவை என்பது உறுதியாகியுள்ளபோதும், பிரபாகரன் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கதையில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும் இதுவிடயமாக கருத்துத் தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் சேபால வர்ணகுலசூரிய குறிப்பிடும்போது, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி முல்லைத் தீவு கடலில் வைத்து கடற்படையினர் புலிகளின் படகுகள் மூன்றைத் தகர்த்ததாகவும், யாரும் அங்கிருந்து தப்பிச் செல்லவில்லையென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தில் தலைமைத்துவம் வகித்தவர்களின் வீரச் சாவுக்காக தங்களது அனுதாபத்தைத் தெரிவிக்குமாறு நேற்று, தமிழீழ ஆதரவாளர்களிடம் இலண்டன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர்.

(கேஎப்)

Read more...

வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் மட்டுமே கண்ணிவெடி அகற்றவேண்டியுள்ளது!

வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கையின் மூலம் இதுவரை வடக்கில் 1345 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதுவரை காலம் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள், மிதிவெடிகள், யுத்த தாங்கி அழிப்பு வெடிகள் மற்றும் பல்வேறு வகையான வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

செல்வராசா கஜேந்திரன் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று மாலை மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மேலதிக தகவல்களைப் பெறும் பொருட்டு பொலிஸ் ஊடகப் பிரிவை நாம் தொடர்பு கொண்ட போது இது தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.

Read more...

அழகிப் போட்டியில் இணைந்தது வயிற்றிலுள்ள குழந்தை!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்னும் பிறக்காத, தனது வயிற்றில் வளரும் குழந்தையை குழந்தைகளுக்கான அழகிப் போட்டியாளர்களில் ஒருவராக சேர்த்துள்ளார்.

26 வயதான ஜென்னி ஒலிவர் எனும் இப்பெண் தற்போது 7 மாத­ கர்ப்பிணியாக உள்ளார்.எதிர்வரும் ஜூலை மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள குழந்தைகளுக்கான அழகிப் போட்டியில் தனது வயிற்றில் வளரும் குழந்தையையும் போட்டியாளர்களுக்கான பட்டியலில் இணைத்துள்ளார் ஜென்னி.

இக்குழந்தைக்கு எல்லா என பெயரிடவுள்ளதாக அவர் கூறுகிறர்ர. ஜென்னிக்கு ஏற்கெனவே 10 வயதான மகளும் 7 வயதான மகளும் உள்ளனர். மூத்த மகளான ஜெஸிகா ஏற்கெனவே சிறுமிகளுக்கான அழகிப் போட்டிகளில் பங்குபற்றியவர்.

இந்நிலையில் தனது நடனத் திறமையும், ஜெஸிகாவின் அழகிப் போட்டி அனுபவமும் தனது இரண்டாவது மகள் அழகிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு கைகொடுக்கும் என தான் நம்புவதாக ஜெஸிகா ஒலிவர் கூறுகிறார்.

Read more...

சோசலிச சமத்துவக் கட்சி ஆஸ்திரேலியக் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது:

போரை தூண்டுவதை எதிர்த்து போரிடுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம். By the Socialist Equality Party

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) செப்டம்பர் 14 அன்று நடைபெறவிருக்கும் கூட்டாட்சி தேர்தலில் ஐந்து மாநிலங்களில் செனட் இருக்கைகளுக்கு ஒரு வேட்பாளர்கள் குழுவை நிறுத்தவிருக்கிறது.
அதிகரித்துவரும் போர் அபாயத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியாவிலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும், ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற இலக்குடன் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகள் செய்து வருகின்ற ஒரு ஒன்றுபட்ட பிரச்சாரத்தின் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இன் இந்தத் தேர்தல் தலையீடு இருக்கும். பெருமந்த நிலை காலத்திற்குப் பின்னரான உலக முதலாளித்துவத்தின் மிக மோசமான பொருளாதார உடைவிற்கு நடுவே, மூன்றாம் உலகப் போருக்கான விதைகள் விதைக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதல் என்ற வடிவத்தில் அவை ஏற்கனவே வேர் விட்டு வளரவும் தொடங்கி விட்டன.

ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே ஒரு பரந்த மற்றும் சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே எமது பிரச்சாரத்தின் மத்திய இலக்காக இருக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியமானது, தனது வரலாற்றுவழியான பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் முயற்சியில் கடந்த இரண்டு தசாப்தங்களில் பால்கன்கள், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான மூர்க்கத்தனமான போர்களை நடத்தி வந்திருக்கும் நிலையில், இப்போது சீனாவின் பொருளாதார சக்தி அடக்கி வைக்க வேண்டிய ஒரு அச்சுறுத்தலாக பெருகி விட்டிருக்கிறது என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ வலிமை மீது கவனம் குவித்து வருகிறது. துரிதமாக அணுஆயுதப் போரின் பரிமாணங்களை எடுக்கக் கூடியதும், மனித நாகரிகத்தின் அடிப்படையான எதிர்காலத்தையே அச்சுறுத்தக் கூடியதுமான ஒரு போர் என்பது அமெரிக்காவின் திட்டநிரலின் தடுக்கவியலாத தர்க்கமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை அமைப்பு(Australian Strategic Policy Institute -ASPI) அமெரிக்க இராணுவத்தின் புதிய வான்கடல் (AirSea Battle) யுத்த திட்டங்கள் குறித்து 2013 ஏப்ரலில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்று இந்த முடிவிற்கு வந்திருந்தது: “எதிர்காலத்தில் சீனாவிற்கு எதிராய் வரக் கூடிய போரில் ஈடுபடுவதற்கும் வெல்வதற்குமான ஒரு இராணுவ மூலோபாயம் என்ற ‘சிந்தித்துப் பார்க்கமுடியாத ஒன்றை’ பென்டகன் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.”

பசுமைக் கட்சியினர் உடந்தையாக இருக்க, லிபரல் மற்றும் தேசியவாதக் கட்சிகளின் முழு ஆதரவுடன், கிலார்டின் தொழிற்கட்சி அரசாங்கமானது ஆஸ்திரேலியாவை இந்தப் போர் தயாரிப்புகளின் முன்வரிசையில் நிறுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலிய மக்களின் முதுகின் பின்னால், கில்லார்ட், ஒபாமா நிர்வாகத்தின் சீன-விரோத ஆசியாவுக்கு “முன்னுரிமை கொடுத்தலுக்கு” நிபந்தனையற்ற ஆதரவுக்கரம் நீட்டி, இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அதேசமயத்தில் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களுடன் ஒரே குரலில், இந்த ஒப்பந்தங்களின் தாக்கத்தையும் அவற்றின் விரிவாக்கத்தையும் மறைக்கிறார்.

எதிர்வரவிருக்கும் தேர்தல் முற்றுமுதலாய் ஒரு மோசடியான அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஊடக-ஆதரவுடனான “உத்தியோகபூர்வ” பிரச்சாரத்தில் உண்மையான பிரச்சினைகள் எதுவுமே எழுப்பப்படுவதில்லை, எழுப்பப்படப் போவதுமில்லை. தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் உண்மையை கூறுவதற்கும், அவர்கள் எதிர்கொள்கின்ற வாழ்வா-சாவா பிரச்சினைகளை எழுப்புவதற்குமே சோசலிச சமத்துவக் கட்சி இத்தேர்தலில் தலையீடு செய்கின்றது. முதலாவதும் முதன்மையானதுமாக, நாங்கள் போருக்கான தூண்டுதல் தீவிரப்படுத்தப்படுவதை வெளிப்படுத்தி, அத்துடன் அத்தனை இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகளும் பகிரங்கமாக்கப்பட வலியுறுத்துவோம். இருபதாம் நூற்றாண்டின் பாதையில் இரண்டு முறை, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் மனிதகுலத்தை உலகப் போருக்குள் அமிழ்த்தி பேரழிவுகரமான பின்விளைவுகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. அவர்கள் மீண்டும் அதனைச் செய்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது!

தொழிலாள வர்க்கம் அதிமுக்கிய கேள்விகளுக்கான பதில்களை கோருவதுடன் அதற்கான பதிலையும் பெற வேண்டும். கில்லார்ட் செய்திருக்கும் இரகசிய ஒப்பந்தங்கள் என்ன? ஆஸ்திரேலிய இராணுவம் அமெரிக்க இராணுவத்தின் தரப்பிற்குக் கொடுத்திருக்கும் உறுதிப்பாடுகள் என்ன? ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் படைத்தளங்களின் உண்மையான நோக்கம் என்ன? புதிதாக என்ன இராணுவத் தளங்களும் இராணுவ தலையீடுகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன? சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகள் எவ்வளவு முன்னேறியிருக்கின்றன?

”ஆஸ்திரேலியாவில் அமெரிக்க இராணுவத் தளங்கள் எதுவும் கிடையாது” என்று தொழிற்கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித் கூறியிருக்கிறார். அவர் பொய் சொல்கிறார். பனிப்போர் காலத்தில் பைன் முனை மற்றும் வடமேற்கு முனை பகுதிகளில் அமைக்கப்பட்ட தளங்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையில் நடைபெற்ற போர்களில் ஒரு மிக முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றன. சீனாவுக்கு எதிரான போருக்கென அமெரிக்க இராணுவம் இடும் திட்டங்களுக்குள் இவை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

2011 நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒபாமா நிகழ்த்திய உரையின் போது அறிவித்த டார்வின் அமெரிக்க கடற்தளம் சீனாவுக்கு எதிரான முன்னுரிமை கொடுத்தலின் இராணுவவாத நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது முழுவீச்சில் செயல்படத் தொடங்கும்போது, மத்திய கிழக்கில் இருந்தும் ஆபிரிக்காவில் இருந்தும் எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களுக்காக சீனா எந்த கடல்வழிப் பாதைகளை சார்ந்திருக்கிறதோ அந்த முக்கிய பாதைகளை தடைசெய்யும் வகையில் ஆஸ்திரேலியாவிற்கு அண்மித்த வடக்கில் கடற்படை, தரைப்படை மற்றும் விமானப் படைப் பிரிவுகள் இதில் இடம்பெற்றிருக்கும்.

ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற இராணுவ விமானங்களை இயக்குவதற்கான ஒரு தளத்தை கோகோஸ் தீவுகளில் அமைப்பதற்கும் மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள ஸ்டேர்லிங் கடற்படைத் தளத்தை அமெரிக்காவின் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஒரு தங்கும் துறைமுகமாக மாற்றுவதற்கும் கூட திட்டங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே ஆசியப் பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் ஏராளமான பல பதட்டம்மிக்க பகுதிகளை உருவாக்கி விட்டிருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று கூட ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்று அதன்மூலம் ஆஸ்திரேலியாவை உடனடியாக போருக்குள் இழுத்து விட முடியும்.

* வரலாற்றுரீதியாக சீனா ஒரு மூலோபாய இடைத்தாங்கியாக கருதும் வட கொரிய ஆட்சிக்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் மூலம் கொரியத் தீபகற்பத்தில் பதட்டங்கள் அதிகரித்திருக்கின்றன.

* சர்ச்சைக்குரிய தீவு வரிசைகளுக்கு உரிமை கோருவதில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் வரக்கக்கூடிய ஒரு மோதலில் அமெரிக்கா ஜப்பானுக்கு இராணுவ ஆதரவை உறுதியளித்திருக்கிறது.

* சீனாவுக்கு எதிரான பிராந்திய உரிமைப் பிரச்சினைகளைத் தொடர்வதற்கு வியட்நாமும் பிலிப்பைன்ஸும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

* சீனாவுடன் தொடர்புடைய மூலோபாய இருப்பிடம் காரணமாக பர்மாவும் மங்கோலியாவும் அமெரிக்காவின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கையில் சீனாவுக்கான மாற்று எடையாக இந்தியாவுடன் நெருக்கமாக பிணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கக் கூட்டணிகளின் வலைப்பின்னல் பெருகுவதும், இந்தப் பிராந்தியத்திலான இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளும் சீனப்பெருநிலத்தை சுற்றி தொடர்ந்து இறுக்கப்படும் ஒரு கயிறாக இருக்கிறது.

பிராந்திய மோதல்கள் பெரிய சக்திகளின் நலன்களை ஊடறுக்கும் நிலையில் இருக்கின்ற ஆசியச் சூழ்நிலையானது முதலாம் உலகப் போருக்கு தூண்டுதலளித்த 1914க்கு முந்தைய பால்கன்களின் நிலையை அதிகமாய் ஒத்திருக்கிறது. சீனாவின் பொருளாதார விரிவாக்க நிலைக்கு அமெரிக்கா காட்டுகின்ற ஆழமான குரோதம் அத்தகையதொரு எரியூட்டலுக்கான எரிபொருளாக அமைந்திருக்கிறது. சீனா உலக மேலாதிக்கத்தினை தேடும் ஒரு ஏகாதிபத்திய சக்தி அல்ல. இந்நாடு பெரும் ஏகாதிபத்திய சக்திகளால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் பூகோள-அரசியல் கட்டமைப்பினுள் ஒரு இரண்டாம்தர நிலையையே வகிக்கின்றது. ஆனால் உலக முதலாளித்துவத்தின் மலிவு உழைப்பு மற்றும் உற்பத்திக்கான களமாக சீனா எழுச்சி கண்டிருப்பது, முக்கியமான ஆதாரவளங்களும், கச்சாப் பொருட்களும் மற்றும் சந்தைகளும் ஆபிரிக்காவிலோ அல்லது உலகின் வேறெங்கிலுமோ இருந்தாலும் அவற்றைத் தன் பிடிக்குள் கொண்டிருப்பது என்ற அமெரிக்காவின் தீர்மானமிக்க உறுதியுடன் சீனாவை மோதலுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

போருக்கு தொழிலாள வர்க்கத்திலும் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்களின், பரந்த அடுக்குகளிடையேயும் ஆழமான எதிர்ப்பு இருக்கிறது. 2003 இல், ஈராக் போர் தொடங்கப்பட்டதற்கு எதிராக உலகளவில் தன்னெழுச்சியாக வெடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க போர்-எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய வரலாற்றின் மிகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த போர் எதிர்ப்பு உணர்வுகள் மறைந்து விடவில்லை. ஆனால் உத்தியோகபூர்வ பாராளுமன்ற வடிவமைப்பினுள் இது தனக்கான வெளிப்பாட்டைக் காணமுடியாது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் இராணுவவாதத்திற்கான பரந்த எதிர்ப்புக்கு ஒரு சக்தி வாய்ந்த குரலையும் அதன் நனவான அரசியல் வெளிப்பாட்டுக்கான வழிவகையையும் வழங்கும். போருக்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஆசியா முழுவதிலும் உழைக்கும் மக்களுக்கு தீர்மானகரமான தலைமையை அது வழங்கும்.

ஒபாமாவின் இராணுவத் தயாரிப்புகளுக்கு அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் ஆதரவு வழங்குவது மட்டுமல்ல, அமெரிக்க கொள்கை குறித்தும் அதில் ஆஸ்திரேலியாவின் பங்கேற்பு குறித்தும் ஒரு சதிகாரத்தனமான மவுனத்தை அவை பராமரிக்கின்றன. உண்மையில் நடப்பு தொழிற்கட்சி அரசாங்கமே சதியையே அடித்தளமாய் கொண்டு எழுந்ததாகும். 2010 ஜூன் 23-24 ஆட்சிக்கவிழ்ப்பில் கெவின் ரூட் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை கில்லார்ட் ஒருபோதும் விளக்கியதில்லை.

ரூட், அவரது ‘நிர்வாக பாணி’க்காகவோ அல்லது கருத்துக் கணிப்பில் ஆதரவு வீழ்ச்சி கண்டதாலோ அகற்றப்படவில்லை, மாறாக ஒபாமா நிர்வாகம் அதன் சீன விரோத முன்னுரிமை கொடுத்தலின் கடுகளவு விலக்கத்தைக் கூட எதிர்கொள்ள தயாரில்லாதிருந்ததே காரணம். ரூட், அமெரிக்காவுடனான ஆஸ்திரேலியக் கூட்டணிக்கு உறுதியான ஆதரவாளராய் இருந்த அதேநேரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு இணக்கத்தை மத்தியஸ்தம் செய்வதற்கு முனைந்தார். இது அமெரிக்காவின் மோதல் திட்டத்திற்கு முரணானதாக இருந்தது. அதனால் தான் ஆஸ்திரேலிய மக்களை விடுங்கள், நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சிக்கும் கூட தெரியாமல் அமெரிக்காவின் தொழிற்கட்சி “செல்வங்களின்” ஆசியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உட்கட்சி கவிழ்ப்பின் மூலமாக அவர் அகற்றப்பட்டார். கில்லார்ட் பிரதமராகி ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதருடன் பொது அரங்கில் காட்சி தந்த நாள் முதலாகவே, அவரது அரசாங்கம் ஒபாமா நிர்வாகத்தின் பாதையை அடியொற்றிச் செல்லவிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக கூறி வந்திருக்கிறார்.

சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் முக்கியமான மூலோபாயப் படிப்பினைகள் அனைத்தின் மீது சோசலிச சமத்துவக் கட்சி தன்னை அடித்தளமாக கொள்வதுடன், குறிப்பாக கடந்த பத்தாண்டு காலத்தின் மூலோபாய அனுபவங்களை கவனத்திற்கு எடுக்கின்றது. ஒரு தசாப்தத்திற்கு முன்னால் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஈராக் ஆக்கிரமிப்புப் போரை தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற உண்மையானது பொதுக் கருத்தின் அழுத்தம் மட்டுமே தன்னளவில் ஏகாதிபத்திய பெருஞ்சக்கரத்தை நிறுத்துவதற்குப் போதுமானதில்லை என்பதை விளங்கப்படுத்துகிறது. அந்த இயக்கம் தோற்றதற்குக் காரணம் அதற்கு ஆதரவு போதவில்லை என்பதால் அல்ல. அதன் தலைமைகள் அந்த இயக்கத்தை நடப்பு அரசியல் கட்டமைப்பிற்கு அடிபணியச் செய்து, ஐக்கிய நாடுகள் அமைப்போ, அல்லது அரசியல் ஆளும்வர்க்கத்தின் ஏதேனும் ஒரு பிரிவின் மீது அழுத்தத்தை கொடுப்பதன் மூலமோ, அமெரிக்காவின் பாதையை மாற்ற நிர்ப்பந்திக்கலாம் என்று வலியுறுத்தி வந்ததே காரணம் ஆகும்.

அதற்குப் பின், போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் சக்திகள் மேலும் வலது நோக்கி நகர்ந்து விட்டன. அவை அனைத்துமே இப்போது அமெரிக்க இராணுவவாதத்தின் பின்னால் தங்களை நிறுத்திக் கொண்டு விட்டன. பல்வேறு போலி-இடது போக்குகளும் 2011 இல் லிபியாவில் குற்றவியல் அமெரிக்க-நேட்டோ தலையீட்டை ஆதரித்து, இப்போது சிரியாவில் “ஆட்சி மாற்ற”த்தை நடத்துவதற்கு அமெரிக்க தலைமையிலான நடவடிக்கையின் பின்னால் அணிவகுத்து நிற்பதில் இந்த மாற்றம் தெளிவாக காணக்கூடியதாய் இருக்கிறது.

குறிப்பாக பெயருக்கு சற்றும் சம்பந்தமில்லாத ’சோசலிச மாற்றீடு’ இப்போது “எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்பதைக் கைவிடுவது அவசியம்” என்று வலியுறுத்தி வருவதில் போலி-இடதுகளின் நிலை இரத்தினச் சுருக்கமாய் விளங்கப்படுத்தப்படுகிறது. இவ்வாறாக நேற்று போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களாய் இருந்த இவர்கள் இன்றோ ஏகாதிபத்தியத்தின் தளராத வக்காலத்துவாதிகளாகி விட்டார்கள். மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கு இவர்களிக்கும் ஆதரவும், ஆசியா-பசிபிக்கில் அமெரிக்க போர் தயாரிப்புகள் குறித்து அவர்கள் கொள்ளும் மௌனமும், அவர்கள் ஏற்கனவே சீனா மீதான தாக்குதலை ஆதரிக்க அணிவகுத்து விட்டனர் என்பதையே குறிக்கிறது.

இந்தப் போக்குகளின் பரிணாம வளர்ச்சி ஆழமான சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளில் தான் வேர் கொண்டிருக்கிறது. இவை தொழிலாள வர்க்கத்திற்காகப் பேசுவதில்லை, மாறாக கடந்த காலத்தில் சமூகத்தின் உயரடுக்குகளில் திரண்ட பரந்த சொத்துகளுக்கான மூலவளமாக இருந்த கட்டற்ற நிதி ஒட்டுண்ணித்தனத்தின் மீதும் ஏகாதிபத்தியம் மூலப்பொருட்கள் மற்றும் மலிவு உழைப்பின் முக்கியமான மூலவளங்களை தனக்காகப் கட்டுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளின் மீதும் (முதலில் கூறிய சொத்துகள் இறுதியாக சார்ந்திருப்பது இவற்றின் மீது தான்) தங்களது பொருளியல் நலன்கள் பொதிந்திருக்கக் காணும் உயர் நடுத்தர வர்க்கத்தின் வசதியான தட்டுகளுக்காகவே அவர்கள் பேசுகின்றனர்.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமானது, போரின் மூலாதாரமான முதலாளித்துவ இலாப அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அது அணிதிரட்டுகின்ற மட்டத்திற்குத் தான் முன்செல்ல முடியும் என்பதே கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பாடம் ஆகும்.

உண்மையான போர் எதிர்ப்பு இயக்கம் அபிவிருத்தியுறுவதற்கு தேசிய எல்லைகள் கடந்து தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. அதனால் தான் சோசலிச சமத்துவக் கட்சி தேசியவாதம், பேரினவாதம் மற்றும் இனவெறியின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை தனது பிரச்சாரத்தின் மையத்தானத்தில் வைக்கிறது. கில்லார்டின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் தலைமையில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அகதிகள்-விரோத வெறுப்புப் பிரச்சாரத்தைத் தூண்டி விடுகின்றன, அதேவேளையில் கில்லார்டும் அவரது அமைச்சர்களும் அத்துடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருக்கிற இவர்களது ஆதரவாளர்களும் சேர்ந்து “வெளிநாட்டு தொழிலாளர்களை” கண்டனம் செய்வதோடு “ஆஸ்திரேலியர்களுக்கு வேலைகளுக்கு” அழைப்பு விடுகின்றனர். தொழிற்கட்சியின் வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கையின் மோசமான மரபுகளை மறுபடியும் தட்டி எழுப்புகின்ற வேலையானது, உலகெங்கிலும் இருந்தான புலம் பெயர்ந்தவர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தை ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் மற்றும் உலகளவிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிளவுபடுத்துகிற மிகப் பிற்போக்குத்தனமான அரசியல் நோக்கத்திற்கே சேவைசெய்கிறது.

இரண்டாம் உலகப் போரையொட்டி லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: ”மனிதகுலத்தை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கு முன்பாக முதலாளித்துவமானது உலகச் சூழலை, தேசிய மற்றும் இன வெறுப்பின் நச்சு ஆவிகளைக் கொண்டு அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.” அவரது எச்சரிக்கை சிறிதும் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற சோசலிச இயக்கத்தின் அறைகூவல் முழக்கம் மட்டுமே போருக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாய் நிலைநிறுத்துவதற்கான ஒரே அடிப்படை ஆகும். ஏகாதிபத்தியம் உலகப் பேரழிவுக்கு அச்சுறுத்தும் ஒரு வலிமையான பயங்கரமான சக்தியாக இருக்கிறது. அதனினும் வலிமையான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர இயக்கம் என்ற சக்தியால் மட்டுமே அதைத் தோற்கடிக்க முடியும்.

ஒரு சமூக எதிர்-புரட்சி

வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போர் என்பது தவிர்க்கவியலாமல் தாயகத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்துடன் கைகோர்த்தே வருகிறது. 2008 இன் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின், ஒவ்வொரு நாடாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தினால் வென்றெடுக்கப்பட்ட அனைத்து சமூக நலன்களுக்கும் எதிரான ஒரு சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒப்பானவை. கிரீசிலும், சைப்ரஸிலும், ஸ்பெயினிலும், இத்தாலியிலும் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாள வர்க்கமானது 1930களின் நிலைமைகளுக்கு மீண்டும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் போருக்குப் பிந்தைய சமூக நலன்புரி அரசில் எஞ்சியிருந்த கொஞ்சமும் திட்டமிட்டு அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்க தொழிலாளர்களும் பெருமந்தநிலை காலத்திற்குப் பிந்தைய மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். டிரில்லியன் கணக்கான டாலர்களை நிதி மூலதனத்தின் ஒட்டுண்ணிகளுக்கு தாரை வார்த்து விட்டு, ஆளும் உயரடுக்கினர், முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை செலுத்தச் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே ஒரேயொரு கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
“சுரங்கத் துறை எழுச்சி”யின் காரணமாக ஆஸ்திரேலியா எப்படியோ இந்த நெருக்கடியில் இருந்து தப்பித்து விட்டதாக கூறியதெல்லாம் சுக்குநூறாகிக் கிடக்கிறது.

உலகின் முக்கியமான மத்திய வங்கிகள் டிரில்லியன் டாலர் கணக்கில் அச்சடித்ததால் விளைந்த அதிகரித்த தாதுப்பொருள் ஏற்றுமதி விலைகள் மற்றும் உலகளாவிய நாணய மதிப்புகளிலான ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் ஒரு விளைபொருளான ஆஸ்திரேலிய டாலரின் பரிவர்த்தனை மதிப்பிலான அதிகரிப்பு தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு புதிய சுற்றுத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு ஆளும் உயரடுக்கினால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு தொழிற்சாலை மூடப்படுவதும் அல்லது ஒரு புதிய சுற்று ஆட்குறைப்புகளும் அல்லது வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை சரிக்கும் நோக்குடனான பொருளாதார “மறுசீரமைப்பும்” அன்றாடச் செய்திகளாகி விட்டன.

ஆஸ்திரேலிய முதலாளித்துவம் “சர்வதேசரீதியாக போட்டித்திறனுடன் திகழ” உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் (தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக) என்பதே ஆளும் உயரடுக்கின் அத்தனை பிரிவுகள் மற்றும் அவற்றின் ஊடக ஊதுகுழல்களிடம் இருந்து வரும் தொடர்ச்சியான கோரிக்கையாக இருக்கிறது. நிதி மூலதனம் மேலும் மேலும் இலாபம் அதிகமான முதலீடுகளைத் தேடுவதன் காரணத்தால் ஒட்டுமொத்த தொழிற்துறைகளுமே அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ளன.

சமூக ஏற்றத்தாழ்வு ஆழமடையும் காரணத்தால், பெரும்பான்மையாக இருக்கும் சாதாரண உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் துரிதமாக சேதமடைந்து கொண்டிருக்கின்றன. பலருக்கும் வீட்டுவசதிக்கான செலவுகள் ஏற்கனவே சகிக்க முடியாத மட்டங்களை எட்டி விட்டன. அதேநேரத்தில் வீட்டளவிலான கடன் 2000 இல் வருமானத்தில் 94 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று வருமானத்தில் 150 சதவீதம் என்ற மட்டத்திற்குச் சென்று விட்டது. இதில் பெரிய வங்கிகள் தான் ஆதாயமடைந்து இருக்கின்றன. 2012 இல் 25 பில்லியன் டாலரளவுக்கு இலாபங்களைத் திரட்டியுள்ளன.

நிதி மூலதனம் சாதனை அளவான இலாபங்களை ஈட்டுகின்ற அதேநேரத்தில் தான் சமூக சேவைகளும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களும் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுச் சுகாதார அமைப்புமுறை அதன் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தெரிந்தெடுத்த அறுவைச்சிகிச்சை (எலெக்டிவ் சர்ஜரி) என்று சொல்லப்படுவதற்கான காத்திருப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிற அதேசமயத்தில் ஊழியர் எண்ணிக்கை வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆதாரவளம் குறைந்த “செயல்திறன் குறைந்த” அரசுப் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அகற்றி தனியார் அமைப்புமுறைக்குள் தள்ளுவதை நோக்கமாகக் கொண்ட கில்லார்டின் “கல்விப் புரட்சி”யின் காரணத்தால் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், கூட்டம் மிகுந்த வகுப்பறைகளுக்கும் உரைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். அதேபோல கல்விக் கட்டணத்திற்காக அவர்கள் உழைக்கும் நேரம் முன்னெப்போதையும் விட நீண்டுகொண்டு சென்று கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 14க்குப் பிறகு அதிகாரத்திற்கு வரக் கூடிய எந்தவொரு அரசாங்கமும் அமல்படுத்தவிருக்கும் தாக்குதலுடன் ஒப்பிட்டால் இதுவரை வந்த தாக்குதலும் கூட முக்கியத்துவம் குறைந்ததாகி விடும் என்கிற அளவுக்கு வரவிருக்கும் அரசாங்கத்தின் தாக்குதல் இருக்கும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. 2012 ஏப்ரலில், இலண்டனில் வழங்கிய ஒரு உரையில், தாராளவாத எதிர்க்கட்சியின் கருவூல செய்தித்தொடர்பாளர் ஜோ ஹாக்கி பெருநிறுவன உயரடுக்கினர் கோருகின்ற திட்டத்தை வார்த்தைகளில் வடித்தார்: “உரிமைகளுக்கான காலத்தை” முடித்து வைப்பதன் மூலமாக - அதாவது நலன்புரி அரசிலும் மில்லியன்கணக்கான சாதாரண உழைக்கும் மக்கள் வாழ்வதற்குச் சார்ந்திருக்கக் கூடிய அத்தியாவசியமான சமூக சேவைகளிலும் எஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் அகற்றுவதன் மூலமாக - நிதிப் பற்றாக்குறையை உபரியாக மாற்றுவது தான் அந்தத் திட்டம்.

சர்வாதிகார அச்சுறுத்தல்

இத்தகைய நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவில்லை என்பதோடு உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபகத்தை நோக்கிய முன்கண்டிராத வெறுப்பும் கோபமும் எழுந்திருக்கிறது. நாடாளுமன்றக் கட்சிகள் - தொழிற்கட்சி, தாராளவாத-தேசியவாத மற்றும் பசுமைக் கட்சிகள் - அனைத்தும் ஜீவமரணப் போராட்டத்தில் இருக்கின்றன. தனது திட்டநிரலைச் சாதிக்க முடியாமல் போவது குறித்து நாளுக்கு நாள் வெறுப்படைந்து கொண்டு செல்லும் ஆளும் உயரடுக்கினர் அதனைத் திணிக்க நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகளிலும் சர்வாதிகார நடவடிக்கைகளிலும் இறங்குவர். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் இதில் இடம்பெற்றிருக்கும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தளைகளில் இருந்து விடுபடுவதற்கு ஆஸ்திரேலிய முதலாளித்துவம் கொண்டிருக்கும் விருப்பமானது 1975, நவம்பர் 11 கான்பெரா ஆட்சிக் கவிழ்ப்பில் விளங்கப்பட்டது. ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விட்டலமின் தொழிற்கட்சி அரசாங்கம் சிஐஏ உள்ளிட்ட சக்திகளால் அகற்றப்பட்டமை மற்றும் அதற்கு விட்லாமே கூட கோழைத்தனமாக சரணடைந்தமை ஆகியவற்றின் முக்கியத்துவம் அதனையடுத்து தொழிற்கட்சி பெற்ற உருமாற்றத்தில் வெளிப்பட்டது. அடுத்து வந்த ஹாக் மற்றும் கீட்டிங்கின் தொழிற்கட்சி அரசாங்கம் சமூக சீர்திருத்தங்களுக்கான எந்த உறுதிப்பாட்டையும் கைவிட்டதோடு, அதற்குப் பதிலாக பெருநிறுவன உயரடுக்கினரின் நலன்களின் பேரில் ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் ஒரு பெரிய “மறுசீரமைப்பை”யும் தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாறு கண்டிராத ஒரு தாக்குதலையும் செயல்படுத்தியது.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே முன்கூட்டி எச்சரித்திருந்ததைப் போல, 2010 ஜூன் 23-24 இல் ஜனநாயகவிரோதமான முறையில் ரூட் ஆட்சி கவிழ்க்கப்பட்டமையானது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதன், ஆளும் வர்க்கம் தனது வர்க்க நலன்களை முன்னெடுக்க எதேச்சாதிகார நடவடிக்கைகளில் மீண்டும் இறங்கவிருப்பதன் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும். அதற்கான தயாரிப்புகள் எல்லாம் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன. 2007 முதலாக, தொழிற்கட்சி அரசாங்கமானது, அதற்கு முன்பிருந்த ஹோவார்டு லிபரல் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பினை கட்டியெழுப்பும் விதமாகவும் மோசடியான “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பதாகையின் கீழும் அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதன் அடிப்படையிலான ஒரு போலிஸ் அரசுக்கு சாரக்கட்டினை வலுவாக வடிவமைத்து உருவாக்கியிருக்கிறது.

போர், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் சர்வாதிகாரம் ஆகிய பிரச்சினைகளுக்கு தொழிலாள வர்க்கம் தனது சொந்தத் தீர்வினை முன்வைக்க ஒரு தொழிலாளர்’ அரசாங்கத்திற்காகவும் சமூகத்தை சோசலிசரீதியில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்கும் போராடுவதன் மூலமாக ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் போராடும்.

முதலாளித்துவ இருகட்சி நாடாளுமன்ற அமைப்புமுறையில் இருந்தும் அதன் பசுமைக் கட்சி மற்றும் போலி-இடது வக்காலத்துவாதிகளிடம் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே இத்தகையதொரு இயக்கத்தின் அடிப்படைக் கடமையாக இருக்கும். “குறைந்த தீமை” என்ற அடிப்படையில் லிபரல்களைக் காட்டிலும் தொழிற்கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதாக போலி-இடதுகள் மோசடித்தனமாகக் கூறுகின்றனர். எல்லா பொய்களைப் போலவே இந்தப் பொய்யும் ஒரு திட்டவட்டமான அரசியல் நோக்கம் கொண்டதாகும். தொழிலாள வர்க்கத்தை முடக்கி அதன் போராட்டங்கள் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கழுத்துப்பிடியை உடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதே அந்த நோக்கமாகும்.

தொழிற்சங்கங்களின் அரவணைப்பின் கீழ் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் நலன்களுக்காகப் போராட முடியும் என்பதான போலி-இடதுகளின் கூற்றும் இதே அளவுக்கு நச்சுத்தனம் கொண்டதாகும். உண்மை என்னவென்றால் தொழிற்சங்கங்கள் எந்த அர்த்தத்திலும் தொழிலாளர்களது அமைப்புகளாக இல்லை. கடந்த மூன்று தசாப்த காலத்தில், உற்பத்தியின் உலகமயமாக்கம் தேசிய ஒழுங்குநெறிகளின் அடிப்படையிலான தொழிற்சங்கங்களின் பழைய, மட்டுப்படுத்தப்பட்ட, சீர்திருத்தவாத வேலைத்திட்டங்களை எல்லாம் முற்றுமுதலாக உடைத்தெறிந்து விட்டது என்பதோடு அவற்றை பெரு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி மூலதனம் ஆகியவற்றின் உத்தரவுகளை நிறைவேற்றும் தொழிற்துறை போலிஸ் படை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதாக மாறிவிட்டிருக்கிறது. தொழிற்கட்சியும் சரி தொழிற்சங்கங்களும் சரி ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கே நேரடியாக சேவை செய்து வருகின்றன.

வெகுஜன சமூக மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். தொழிற்சாலைகளிலும் தொழிலகங்களிலும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட, அவற்றுக்கு எதிரான புதிய சாமானியத் தொழிலாளர்களுக்கான அமைப்புகளை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், சுகாதார வசதிகளுக்கும் மற்றும் பிற சமூக சேவைகளுக்கும் பெருநிறுவனக் கட்சிகள் அமல்படுத்தி வருகின்ற சிக்கன நடவடிக்கை வெட்டுகளுக்கு எதிரான வெகுஜன சமூக மற்றும் அரசியல் போராட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு நாடு முழுவதும் நகரப்பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

எங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு தர தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் மற்றும் தொழில் அறிஞர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. சாத்தியமான மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகளை வழங்க அழைக்கும் அதேவேளையில் தேர்தல் மூலம் வெற்றிகாண்பது மட்டுமே எங்களது பிரதான நோக்கம் அல்ல. மாறாக உலகப் போர், சமூகப் பேரழிவு மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றின் அச்சுறுத்தலுக்கு முடிவுகட்ட முதலாளித்துவ இலாப அமைப்பு முறையைத் தூக்கியெறிவது மற்றும் உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பது ஆகியவற்றுக்கு குறைந்த எதுவும் பிரயோசனமற்றது என்ற விஞ்ஞானபூர்வமான சோசலிச நனவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதும் மற்றும் அதனை ஆயுதபாணியாக்குவதுமே அடிப்படை நோக்கமாகும்.

இதற்கு ஆஸ்திரேலியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது எல்லாவற்றுக்கும் முதலான அவசியமாக உள்ளது. இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938 இல் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு ஆகும். ரஷ்யப் புரட்சியில் லெனினின் சக தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்திற்கும் தேசியவாத சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக நடத்திய போராட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த வகையில் உருவடிவம் பெற்ற புரட்சிகர மார்க்சிசத்தின் மாபெரும் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தின் மீது தனது அரசியல் வேலைகளுக்கான அடித்தளத்தை மிக நனவுடன் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே. சமூக சமத்துவத்திற்கும், வறுமை, சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் போர் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்குமாய் சோசலிசத்திற்கான அவசியமிருப்பதன் மீது உடன்பாடு கொண்ட அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபெறுவதற்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணைய அங்கமான உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து வாசித்து வருவதற்கும், எங்களது வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளை ஆய்வு செய்து எங்களது தோழர்களாக இணைவதற்கும் நாங்கள் அழைப்புவிடுக்கின்றோம்.

Read more...

திங்கட்கிழமையிலிருந்து புதிய மின்பட்டியல்....

அண்மையில் அதிகரிக்கப்பட்ட புதிய கட்டண மாற்றங்களுடனான மின்பட்டியல் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் பாவனையாளர்களின் கைகளுக்கு வந்துசேரக்கூடிதாகவிருக்கும் என மின்சாரத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

ஏப்ரல் மாதம் இருபதாம் திகதியிலிருந்து மின்சாரப் பட்டியல் மே மாதம் 20 ஆம் திகதிவரை கணிப்பிடப்படும் எனவும் மின்சாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனால், எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பாவனையாளர்களின் கைகளை வந்தடையும் சகல மின்சாரப் பட்டியல்களும் அதிகரிக்கப்பட்ட கட்டண அமைப்பிலேயே கணிக்கப்படும் என மின்சாரத் திணைக்களத்தின் சிரேட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்சாரத் திணைக்களம் வெளியிட்ட புதிய கணிப்பீட்டு முறைக்கேற்ப, 60 அலகுகளுக்கு மேற்பட்ட அனைத்து மின்சாரப் பட்டியல்களினதும் தொகையில் அதிகரிப்பு ஏற்படும்.

(கேஎப்)

Read more...

மர்வின் போன்றவர்கள்தான் நாட்டுக்குப் பொருத்தமானவர்களாம்! - மிகிந்தலா விகாராதிபதி

மர்வின் சில்வா போன்றவர்களே இந்நாட்டு அரசியலுக்குத் தேவை என மிகிந்தலா விகாராதிபதி வலவாஹென்குணவெவே தம்மரதன தேரர் குறிப்பிடுகிறார்.

மிகிந்தலாவின் வாகனத் தரிப்பிடத்தின் அபிவிருத்தி விடயங்களை அமைச்சர் மர்வின் சில்வா பார்வையிடுவதற்காகவும் மதகுருமார்களைச் சந்திப்பதற்காகவும் மிகிந்தலாவுக்கு வருகைதந்தபோதே தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'மர்வின் சில்வா அபூர்வமான ஒரு பாத்திரம். அவர் நேராகக் கதைத்து, நேராக பணிசெய்பவர். சிலருக்கு அவரது போக்கு பிடிக்காமலிருக்கலாம். மர்வின் சில்வா போன்றவர்கள்தான் இந்நாட்டுக்குப் பொருத்தமானவர்கள்' என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மர்வின் சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

‘நான் வேலை ஒன்றைச் செய்யத் தொடங்கினால் அது ஒருபோதும் தப்பாகியதும் கிடையாது. இடைநிறுத்தப்பட்டும் இல்லை. எதிர்வரும் பொசன் போயாவுக்கு முன்னர் முன்னெடுத்த பணியை முடித்துவிடுவேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

பிரான்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்!

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் தெய்வாதீனமாக நடிகர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று பிரெஞ்ச் தொலைக்காட்சி ஆஸ்கார் விருது வென்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் வால்ட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு நடிகரான டேனியல் அடேல் ஆகியோரிடம் பேட்டி எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

இந்த பேட்டிக்காக கடற்கரையில் ஒரு பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பேட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. பேட்டி நடாத்தப்பட்ட இடத்திலும் ஏராளமான பார்வையாளர்கள் நின்றிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு நபர் திடீரென எழுந்து வானை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன், நடிகர்கள் இருவரும் பாதுகாப்பு தேடி பாய்ந்து ஓடினர். இதற்கிடையே நடிகர்களுடன் வந்திருந்த தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் பாய்ந்து சென்று, துப்பாக்கியால் சுட்ட நபரை தரையில் வீழ்த்தினர். அந்த நபரை சோதனையிட்டபோது கையில் வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து கூட்டத்தினரை உடனடியாக அங்கிருந்து ஓடிச் செல்லுமாறு பாதுகாவலர்கள் கேட்டுக்கொண்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சந்தேக நபரை சேதனை செய்தபோது அந்த நபரிடம் இருந்தது போலி வெடிகுண்டு என தெரியவந்தது. குறித்த நபர், மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலீஸார் தெரிவித்தனர்.

Read more...

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப் பற்று தேர்தல் பின்நோக்கிச் செல்வதால் வடமாகாணசபைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது- பி.தே.ஆ

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் விரைவில்! வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதி!

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பின்நோக்கிச் செல்வதால் வடமாகாணசபைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,

இலங்கையில் உள்ள 337 உள்ளுராட்சி சபைகளில் 335 சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்து நீதிமன்றத்தின் ஊடாக தற்காலிக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது இந்த இரண்டு சபைகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து சாதகமான முடிவுகிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இவ்வாறு தீர்வு கிடைத்தால் இரண்டு சபைகளுக்குமான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த இரண்டு சபைகளுக்கான தேர்தல் பின்நோக்கிச் செல்வதால் இது வடமாகாணசபைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இந்த சபைகளுக்குரிய தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதியுடையவர்களாக உள்ளனர் என்றும், கடந்த 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி யாழ் மாவட்டத்தில் 426,703 வாக்காளர்களும், மன்னார் மாவட்டத்தில் 70, 085 வாக்காளர்களும், வவுனியா மாவட்டத்தில் 96, 702 வாக்காளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 59, 409 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68,584 வாக்காளர்களுமாக மொத்தம் 721, 488 வாக்காளர்களாக பதிசெய்துள்ளனர்.

யுத்த காலப்பகுதியல் உயிரிழந்த மற்றும் காணாமல் போனாவர்கள், மற்றும் புலம்பெயர் தேசத்தில் இருந்தவர்களது பெயர் விபரங்களும் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டுக்கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அவர் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு மேற்கொள்ளும் போது அனைவரது விபரங்களும் சரியான முறையில் ஆய்வு செய்து பதிவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

Read more...

நான்காவது ஆண்டு யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை! தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குல........

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து காலி முகத்திடலில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யுத்த வெற்றி விழா நடைபெற்றது இன்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில்,

தாய் நாட்டை மீட்டெடுத்தமைக்கான வெற்றிவிழாவை நான்காவது ஆண்டாகவும் கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றேன். இலங்கை வரலாற்றில் தாய்நாடு ஒன்றிணைக்கப்பட்ட சிரேஷ்டத்துவமான சந்தரப்பமாகும். அதுமட்டுமன்றி மரணபயம் நீக்கப்பட்டு சுதந்திரமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும். அதற்கப்பால் மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும். தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் பலியானார்கள், கண்,காது, அவயவகங்களை இழந்தனர். இரத்தம் மற்றும் வியர்வையை பூமிக்கு பூஜை செய்தனர் என தெரிவித்தார்.

மேலும், சிரேஷ்டத்துவமிக்க படையினரை சிலர் சர்வதேச தூக்கு மேடைக்கு கொண்டுச்செல்வதற்கு முயற்சித்தனர். இன்னும் சிலரோ படையினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான நலன்புரி விடயங்களை செய்துவருகின்றனர். எதிர்காலத்திலும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு சேவையாற்றுவோம் அதற்கான சேவைகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

மேலும் ஒரு காலத்தில் காலி முகத்திடல் மூடப்பட்டிருந்தது. மத்தியவங்கி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகிலிருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அவற்றுக்கு அருகிலிருக்கின்ற ஹோட்டல்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990 களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருகின்றார் என தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள் புலிகளினால் தாக்குல்கள் நடத்தப்பட்ட சந்திகளாவும் இடங்களாகவுமே அடையாளம் காணப்பட்டன. அவ்வீதியாக அல்லது அந்த இடங்களை கடந்து செல்கையில் இந்த இடத்தில் தான் ஜனாதிபதி பிரேமதஸா கொல்லப்பட்டார். இந்த சந்தியில் தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். நாட்டில் எங்கும் எவ்விடத்திற்கும் சென்று எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இதயத்தில் மரணபயமிருந்த நாடாகவும் இந்நாடு இருந்தது. மக்களை மீட்டெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை.

மக்கள் தாக்கப்பட்டபோது 5ஃ6 அதிகாரத்துடன் இருந்த ஜனாதிபதி மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார். புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துதவிய ஜனாதிபதி புலிகளினாலேயே கொல்லப்பட்டார். புலிகளின் குண்டுத்துளைக்காத ஆடையை வழங்கி சமாதானத்திற்கு அழைத்துவந்த இந்திய பிரதமரையும் புலிகள் இந்தியாவில் வைத்தே கொலைச்செய்தனர்.

புலிகளுடன் மோதவேண்டாம் அவர்கள் கேட்பதைகொடுக்குமாறு சர்வதேசம் எங்களிடம் அடிக்கொருத்தடவை கேட்டது. எனினும், நாம் இளைஞர்களின் சக்தி மற்றும் வீரத்தில் நம்பிக்கைக்கொண்டோம். பயத்தை இல்லாது செய்து நம்பிக்கையூட்டினோம். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி சிறுபிள்ளைகளின் இதயங்களுக்கே நன்றாக புரிகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நாட்டை பிரித்து கொடுக்கவும் முயற்சித்தனர். அவ்வாறானவர்களே குளங்களை கட்டிய மன்னனான மஹாசேனனின் பெயரை புயலுக்கு சூட்டுமாறு 2003 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர்.

யுத்தம் செய்த யுகமாக அல்ல, டயர்கள் போட்டப்பட யுகமாக அல்ல, யுத்தம் நிறைவடைந்த, இரத்த கங்கை நிறுத்தப்பட்ட யுகம் மற்றும் நாட்டை முன்னோக்கிய யுகமாக மாற்றவேண்டும். வடமாகாணத்தை பொறுத்தவரையில் 12 கட்சிகள் தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்கின்றனர். பயந்துக்கொண்டு கொழும்பிலிருந்து அன்று அரசியல் செய்தவர்கள் இன்று எவ்விதமான அச்சமும் இன்றி அரசியல் செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் வடக்கு கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம் பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தபோது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை அவர்களுக்கு இராணுவமும் அரசாங்கமுமே உணவுக்கொடுத்தது. தூக்குமேடை வரை செல்லவேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக்கொடுத்தோம். பலர் புனர்வாளிவளிக்கப்பட்டுள்ளனர். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறை இல்லை என அவர் தெரிவித்தார்.

சிவில் படைக்கு தமிழர்கள் 4000 பேரை இணைத்துள்ளோம். முப்படைகளிலும் இணைவதற்கு வரிசைகளில் நிற்கின்றனர். படைகளில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர். அதனால் தான் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது கிளிநொச்சியில் அந்த பிரேரணைக்கு எதிராக மக்கள் அணித்திரண்டு எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒருத்தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர். காலத்திற்கு காலம் புரட்சி, ஊடகசுதந்திரம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல்கொடுப்பர் அதற்கெல்லாம் நான்கு மாதங்களுக்கு ஒருதடவை நாங்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றோம் என்பதுடன் தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ பறிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியேன் என அவர் தெரிவித்தார்.

Read more...

"நீங்கள் ஒரு முஸ்லிமை தாக்கும் போது உங்கள் மீது அனைத்து முஸ்லிம்களும் தாக்குவார்கள்" - பொஸ்டன் குண்டுதாரி

குண்டுதாரிக்கு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்க்கப்படுகின்றது

பொஸ்டன் குண்டுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 வயது சொகர் தமர்னெவ், குறித்த தாக்குதல் 'பழிக்கு பழி' நடவடிக்கை என அவர் விட்டுச் சென்ற சர்னெவ் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து சர்னெவ் துப்பாக்கிக் காயங்களுடன் படகொன்றில் மறைந்து இருந்த நிலையில் பிடிபட்டார்.

இதில் அவர் ஒளிந்திருந்த படகின் உள் சுவரில் பேனையால் குறிப்பொன்றை எழுதியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் அவர், "நீங்கள் ஒரு முஸ்லிமை தாக்கும் போது உங்கள் மீது அனைத்து முஸ்லிம்களும் தாக்குவார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்ட தனது சகோதரர் "தியாகி" என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி பொஸ்டன் குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப் பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய சகோதரர்களில் மூத்தவரான 26 வயது தமர்லன் பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட சர்னெவ் பொஸ்டனில் இருக்கும் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்க்கப்படுகின்றது

Read more...

ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைகள் ஆணைக்குழு முன் சாட்சியம்!

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைகள் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தாம் உழைக்கும் வருமானத்தை விடவும் கூடுதலான சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் அதுபற்றிய உரியவாறு தகவல்களை வழங்காமை என்பன பற்றி கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிடம் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் சுமார் மூன்றரை மணித்தியாலத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தமக்கு எதிராக மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராக கடந்த 10ம் திகதி அவர் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார். எனினும், அவர் நேற்று வாக்குமூலம் வழங்கியதுடன் காலை 9.15 முதல் பிற்பகல் 12.45 வரை விசாரணை இடம்பெற்றது

Read more...

மே - 18 வெற்றி நாளா? சமாதானத்திற்கான நாளா?

இரத்தம் சிந்தாமல் பெற்ற சுதந்திரமும், சுதந்திரத்திற்கு பின்னர் சிந்திய இரத்தமும்.

ஆங்கிலேயர் இம்மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் இந்த அழகிய சின்னஞ்சிறு தீவு பல இராச்சியங்களாக விளங்கியது. இதில் பிரதானமாக கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என்பன விளங்கின. யாழ்ப்பாண இராச்சியத்திற்கு கட்டுப்பட்டதாகவும், சில சமயங்களில் சுயாதீனமாக பலம் பெற்றதாகவும், தனித்துவமானதாகவும் வன்னி இராச்சியம் விளங்கியது. வன்னி மக்களை தமது ஆளுகைக்கு உட்படுத்த இறுதி வரை முடியாதிருந்ததாக இந்நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் குறிப்பேடு ஒன்று சான்று பகிர்கின்றது.

7ஆம் நூற்றாண்டு தொடங்கி 13ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பலம்பெற்றிருந்த சோழ இராச்சியத்தின் ஒரு பகுதியாக இலங்கை தீவானது மும்முடி சோழ மண்டலம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மதுரையை சேர்ந்த பாணர் என்ற யாழ்பாடிக்கு பரிசளிக்கப்பட்ட ஒரு பூமியாக யாழ்ப்பாணம் விளங்குவதாக வரலாறு குறிப்பிடுகின்றது. நெடுந்தீவு முற்காலத்தில் மணிபல்லவம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பிரதேசமே பல்லவ சாம்ராச்சியத்தின் தோற்றுவாய் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழரின் வரலாற்றில் ஆண்ட கதைகளும்; ஏராளம், மாண்ட கதைகளும் ஏராளம். உலகில் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்து இலக்கியம் படைத்தவனும் தமிழன் தான். தமிழர் தம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக போருக்கும், வீரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இறந்த வீரர்களுக்கு நினைவு சின்னங்கள் எழுப்புவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் தமிழ் மரபில் முக்கியமான ஒன்றாகும்.
மகாபாரதத்தில் ஸ்ரீPகிருஷ்ணரால் தர்மத்தினை காக்க ஒரு யுத்தம் நடத்தப்பட்டது. பரிசுத்த வேதாகமத்தில் ஒரு வசனம் வருகிறது. இரத்தம் சிந்தாமல் சமாதானம் இல்லை என்பதுவே அதுவாகும்.

எமது நாடு இரத்தம் சிந்தாமல் பெற்ற சுதந்திரத்தை இந்நாட்டின் தலைவர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். கடந்த 30 வருட யுத்தத்தில் சிந்தப்பட்ட இரத்தமானது அடையப்பட்டுள்ள சமாதானத்திற்கான ஒப்பற்ற விலையாகும். அப்படியானால் மே - 18 நாளின் முக்கியத்துவம் என்ன? ஒரு இனத்தை மற்றொரு இனம் வெற்றி கொண்ட நாளா? இது வெற்றி நாளா? இல்லவே இல்லை. இந்த நாட்டில் சிறுபான்மை இனமொன்று பெரிய அளவில் உயிர் கொடை செய்த இறுதி நாள்.

எனவே மே 18 இனை சமாதானத்திற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நாளாக பிரகடனப்படுத்த வேண்டும். இதனை இந்த யுத்தத்தில் உயிர் நீத்த அனைவருக்குமான ஒரு ஆத்மசாந்தி பிரார்த்தனை நாளாக நினைவு கூரவேண்டும் என்பதே போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் ஏகோபித்த வேண்டுகோளாக உள்ளது. இந்த மே 18 இனை அரசாங்கம்; வெற்றி நாளாக கொண்டாடுவதை நிறுத்தி எமது கோரிக்கைகளுக்கு அமைவாக யுத்;தத்தில் இறந்த அனைத்து மக்களுக்குமான நினைவு சின்னம் ஒன்றை நிறுவி, இறந்துபோன அனைத்து உயிர்களுக்கும் பொதுமக்கள், போராளிகள் என்ற வேறுபாடு பாராமல் ஆத்ம சாந்தி பிரார்த்தனை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து இறந்த உறவுகளை நினைத்து அம்மக்கள் ஒப்பாரி வைத்து அழுது மனச்சுமைகளை இறக்கி வைக்கவும் இறந்த ஆன்மாக்களை சாந்திப்படுத்தவும் நினைவு கூரவும் வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மாறாக இதனை ஒரு வெற்றி நாளாக கொண்டாடுவதன் மூலம் யுத்தத்தை வெறுத்து புத்த பெருமானின் போதனைகளை ஏற்று தமது அரசுரிமை வரீசுகளான மகிந்த தேரரையும், சங்கமித்தையையும் காவியுடை தரித்து துறவறம் பூணச்செய்து இலங்கைக்கு அனுப்பி இலங்கைத்தீவை ஒரு சமாதான பூமியாக்க விரும்பிய மகாசக்கரவர்த்தி அசோகரது தூர நோக்கினையும் புத்தபெருமானின் போதனைகளையும் பின்பற்றி கொண்டிருக்கின்ற இலங்கை மக்களுக்கு நற்செய்தியை சொல்லும் நாளாக இந்த மே - 18 நாள் தொடர்ந்தும் அமையாது என்பNது எமது கருத்தாகும்.


நன்றி
இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

Read more...

Friday, May 17, 2013

கருப்பு அபாயா புர்காவுடன் கண்டி நகரில் நடமாடிய சிங்கள பெண் கைது!

கருப்பு அபாயா அணிந்து முகத்தை மூடிய வண்ணம் கண்டி நகருக்கு பஸ்ஸில் வந்திறங்கிய பெண்ணொருவர் நகர வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டமையினால் அவரை கண்டி பொலிஸார் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் அப்பெண் சிங்களப் பெண் என்பது விசாரணைகளிலிருந்த தெரியவந்துள்ளது.

தான் இந்தியாவிலிருந்து இலங்கை வந்ததாக அப்பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப்பின் பொலிஸார் குறித்த பெண்ணை எச்சரித்து விடுதலை செய்துள்ளனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் பொலிஸாரை தொடர்பு கொண்டதனாலேயே குறித்த பெண் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

Read more...

உயர்தரத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு புதிய சுற்றறிக்கை

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், உயர்தரத்திற்கு மாணவர்களைச் சேர்க்கும்போது, அவ்வப் பாடசாலைகளில் கல்விகற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்தரத்தில் கல்வி கற்பிக்கக்கூடியபாடசாலைகளில் சகல பிரிவுகளும் இல்லாத பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், இன்னும் வெற்றிடங்கள் நிலவுமாயின் பாடசாலை அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள 1 ஏ அல்லாத பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒழுங்குமுறைப்படி சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் பற்றிய விபரங்களையும், பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதுபற்றியும் அறிக்கை தயாரித்து அதிபர் அதனை, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இந்த சுற்றறிக்கைப்படி செயற்படாத அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(கேஎப்)

Read more...

ஒருபோதும் ஐதேகவுடன் இணையமாட்டேன்...! - அஸாத் ஸாலி

தான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லை எனவும், அந்தக் கட்சி முன்னணியாக மாறி தன்னையும் அதற்கு அழைத்தால் தான் அதனுடன் சேர்ந்துகொள்வதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறுவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளபோதும், தேசிய ஐக்கிய முன்னணியுடனேயே தொடர்ந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'எனக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறு பல வேண்டுகோள்கள் வந்தன. என்றாலும் எனக்கென ஒரு கட்சியுள்ளது. அதனை இந்நேரம் மக்கள் வேண்டுகிறார்கள். அக்கட்சிசார் பணிகள் இலங்கையெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்வேளை நாட்டுக்குத் தேவையான கட்சி ஐக்கிய தேசியக் கட்சியென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்றாலும் நாங்கள் கட்சியாக இருந்து அவர்களுடன் கூட்டணி சேர விரும்புகிறோம். என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும்,

அமைப்பாளர்களை இணைக்கும் திட்டம் தற்போது நடைபெற்றுவருவதாகவும், எதிர்காலத்தில் அரசியலில் புதியதொரு பரிணாமத்தை ஏற்படுத்த தனது உதவியையும் வழங்கவுள்ளதாகவும் எனக் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

கிளிநொச்சியில் 6,170ற்கும் அதிகமான பெண்கள் கணவனை இழந்துள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 இற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்குச் சகல துறையினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 பெண்கள் போராலும் ஏனைய அனர்த்தங்களாலும் விபத்துக்களாலும் கணவனை இழந்த நிலையில் பல்வேறு துன்ப, துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மீளக் குடியமர்த்தப்பட்ட பின் இவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இக் குடும்பங்களில் வசிக்கின்ற குழந்தைகளும் சிறுவர்களும் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்கான தேவைகள் என்பனவும் பூர்த்தி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளன.

இதேவேளை எமது மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பல இடம்பெற்றுவருகின்றமை பதிவு செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவங்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெரிதும் பாதிப்பதாகவுள்ளன.

பெண் என்பவள் சமூகத்தில் தங்கையாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக போன்ற பல நிலைகளில் முக்கியம் பெற்று விளங்குகின்றாள். இதனால் பல்வேறு சமூக சவால்களை பெண்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக எமது மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் எமது மாவட்டத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பிரதேச, மாவட்ட மட்டங்களில் உத்தியோகத்தர்களை நியமித்துள்ளோம். ஆனால் இவர்களால் இப்பிரச்சினைகளைத் முழுமையாகத் தீர்த்துவிட முடியாது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குச் சமூக மட்டத்திலுள்ள அனைத்துச் தரப்பினரும் முன்வரவேண்டும்.

இந்த வகையில் எமது மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு அற்ற நிலையே காணப்படுகின்றது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் பெண்கள் பணியகமும் ஜேர்மன் அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து எமது மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள இந்த வேலைத்திட்டமானது எங்களுடைய மக்களுக்கு பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எனவே, இது போன்ற சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட செயற்றிட்டங்களை எதிர்காலத்திலும் முன்னெடுக்கவேண்டும். அதனூடாகவே எங்களுடைய பெண்களுக்கு போதிய விழிப்புணர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.

Read more...

பங்களாதேஷ் தாக்கியது மகாசென்’ 11 பேர் உயிரிழப்பு; 10 இலட்சம் பேர் நிர்க்கதி,

பங்களாதேஷில் ‘மகாசென்’ சூறாவளித் தாக்கம் காரணமாக 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றுமாலை மகாசென் சூறாவளி பங்களாதேஷ் கரையைக் கடக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததையடுத்தே 10 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

பங்களாதேஷின் சிட்டங்கோங் மற்றும் கோக்ஸ் பஜார் ஆகிய மாவட்டங்களில் சூறாவளியால் 40 இலட்சம்பேர் பாதிக்கப்படும் அச்சம் காணப்படுவதாக ஐ.நா. சபை அறிவித்திருந்தது. இதற்கமைமாக 15 மாவட்டங்களிலுள்ள 10 இலட்சம் பேர் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

நேற்றுக்காலை 8 மணிக்கு பங்களாதேஷின் பட்டுக்கஹலி மாவட்டத்தைத் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் இங்கு சூறாவளி தாக்கியதுடன் மாலை பங்களாதேஷின் ஊடாக கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தரையைக் கடக்கும் போது இதன் வேகம் மணிக்கு 100 கிலோ மீற்றர் முதல் 120 கிலோ மீற்றராகக் காணப்படும் என பங்களாதேஷ் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியொருவர் கூறியிருந்தார்.

நேற்றுக் காலை பங்களாதேஷின் சில கரையோர மாவட்டங்களை சூறாவளி தாக்கியதில் 11 பேர் தாங்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் உடைந்து வீழ்ந்ததினால் உயிரிழந்ததாக பங்களாதேஷ் செய்திகள் தெரிவிக்கின்றன. சூறாவளியுடன் பங்களாதேஷின் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மகாசென் சூறாவளி தாக்கும் அச்சுறுத்தல் காரணமாக பர்மாவிலும் ஆயிரக்கணக்கான மக்களும் இடம்பெயர்ந்து பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இச்சூறாவளி காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளில் 80 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

Read more...

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com