Wednesday, September 8, 2010

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மீன்படி உபகரணங்களை ஒப்படைக்க உத்தரவு.

மன்னார் மாவட்டத்தில் கடல்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை எதிர்வரும் ஒக்டோபர் மூன்றாம் திகதிக்கு (03.10.2010) முன்னர் ஒப்படைக்குமாறு மீனவர்களை மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் சந்திரசேகரப்பிள்ளை பவாநிதி வேண்டியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 3ம் திகதி இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்பே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்கூசிவலை , சுருக்குவலை , இழுவை வலை போன்றவை தடைவெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களாகும். இவ் உபகரணங்களை குறித்த காலக்கெடுவுக்கு முன்னர் தாமாகமுன்வந்து பாரமளிக்கும் மீனவர்களுக்கு மாற்று உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வுள்ளதாகவும் மாவட்ட கடற்தொழிற் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வறிவித்தலை மீறிச் செயற்படும் மீனவர்களின் உபகரணங்களை பறிமுதல் செய்ய முப்படையினரின் உதவி நாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் நிருபர் எஸ். ஆர். லெம்பேட்

Read more...

ஈரான் பெண்ணுக்கு 99 கசையடி.விரைவில் கல்லால் அடித்து மரண தண்டனை.

ஈரானைச் சேர்ந்த சகினே முகம்மதி அஷ்டியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அவரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஷ்டியானிக்கு வயது 40. இரண்டு குழந்தைகளின் தாய். இவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்ய தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இவரது முகத்தை வெளியில் தெரியும்படி புகைப்படம் வெளியானதற்காக 99 கசையடி தண்டனையும் கொடுக்கப்பட்டது.

கல்லால் அடித்துக் கொல்லும் தீர்ப்புக்கு உலக நாடுகளிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் ரம்ஜான் மாதத்தின்போது இவ்வாறு செய்வதற்கு இஸ்லாமிய நாடுகளிலும் கூட கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைத்தது ஈரான் இஸ்லாமிய கோர்ட்.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு அஷ்டியானிக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதை அவரது வழக்கறிஞர் ஜாவித் ஹட்டன் கியான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அஷ்டியானிக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என நானும், அவரது இரு குழந்தைகளும் அஞ்சுகிறோம்.

இன்னும் ரம்ஜானுக்கு 3 நாட்களே உள்ளதால் ரம்ஜான் முடிந்தவுடன் தண்டனை நிறைவேற்றப்படும் என அச்சமாக உள்ளது என்றார்.

99 கசையடிகள் தரப்பட்டன:

இதற்கிடையே, இன்னொரு தண்டனையான 99 கசையடிகள் தரும் தண்டனையை நிறைவேற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ஒரு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னொருவர் சரியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ஒரு பெண்தான், அஷ்டியானிக்கு கசையடி தண்டனை கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more...

இந்நாட்டின் ஜனநாயகத்திற்கான பிரேதப் பெட்டிக்கு இன்று இறுதி ஆணி அறையப்பட்டது.

இன்றைய அரசியல் யாப்பு மாற்றத்தின் ஊடாக இந்நாட்டின் ஜனநாயகத்திற்கான பிரதேதப்பெட்டிக்குரிய இறுதி ஆணி அறையப்பட்டுள்ளது என தேசிய ஜனநயக முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளின் இடைவேளையில் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், அவர் தொடர்ந்து பேசுகையில் , நான் இந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது இந்நாட்டினை கொடுமைப்படுத்தும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவருவேன் என மக்களுக்கு உறுதி அளித்திருந்தேன், இந்நாட்டின் ஜனநாயகம் , மக்களின் மனித உரிமைகள் , மற்றும் சகலதும் ஒரு சர்வாதிகாரியால் கட்டுப்படுத்தப்படுவதை நாம் எதிர்கின்றோம். அதே உறுதி மொழியினையே இன்றைய ஜனாதிபதியும் மக்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் இன்று நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முறையில் அரசியல் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலைமைகளையிட்டு நாட்டுமக்கள் யாவரும் அதிர்சியடைந்துள்ளனர். ஏன் ஆழும்கட்சியில் உள்ளவர்கள்கூட தாம் இம்மாற்றந்களை ஏற்றுக்கொள்வதாக பசாங்கு செய்தாலும் அவர்கள் தமக்குள்ளே எம்மைபோல் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து அழுகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களால் இன்றைய சர்வாதிகாரிக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது. ஆனால் நாம் எதிர்போம். எமது பூரண எதிர்பை எடுத்துக்கூறும் விதமாக பல ஆர்பாட்ங்களை நடாத்தியுள்ளளோம். தொடர்ந்தும் எதிர்ப்போம். இதற்கு எதிராக வாக்களித்தும் உள்ளோம்.

ஜனாதிபதிக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளபோதும் , அவர் மேலும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும்பொருட்டு இம்மாற்றந்களை மேற்கொள்கின்றார். இதனூடாக தனதும் தனது குடும்பத்தினதும் பலத்தை மேலும் பெருக்கமுடியுமென அவர் நினைக்கின்றார்.

இந்நிலைமைகளுக்கெதிராக நாம் தொடர்ந்தும் போரடுவோம். அதற்காக பலர் சிறைசெல்லவும் நேரிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் தற்போதும் தடுப்புக்காவலிலே உள்ளேன். ஏதுவாக இருந்தாலும் இந்நாட்டு மக்களை நாம் கீழே விழவிடமாட்டோம். அந்த கடமைக்காக எம்மில் பலர் தமது வாழ்வினை சிறையில் முடித்துக்கொள்ள தயாராகவுள்ளனர்.


Read more...

18ம் திருத்தச்சட்டம் 2/3 பெரும்பாண்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலில் இருதடவைகள் பதவி வகித்த ஜனாதிபதி ஒருவர் போட்டியிடமுடியாது என்ற வரையறை அரசியல் யாப்பின் 18 திருத்தச் சட்டத்திலிருந்து நீக்கிய திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக 161 பேரும் எதிராக 17 பேரும் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆழும் கட்சியின் பக்கம் தாவி 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்ளித்துள்ளர். லக்ஸ்மன் செனவிரத்தன , ஏர்ல் குணசேகர , அப்துல் காதர் , உபெக்ஷா சுவர்ணமாலி , நிமால் விஜெசிங்க , மனுஷா நாணயக்கார ஆகியோரே இன்று ஆழும் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டவர்களாகும்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரேலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மின்னல் சிறிறங்காவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பா.உ பி.பியசேன ஆகியோர் எதிர்கட்சியில் இருந்தவாறு அரசிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்களிப்பை புறக்கணித்துள்ளதுடன் இது தொடர்பான எவ்வித விவாதங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சர்வதேச சிறுவர் தினம் அரச சார்பற்ற நிறுவனங்களால் ஒன்றிணைந்து கொண்டாடப்படவுள்ளது.

(காரைதீவு நிருபர்) அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் முதன் முறையாக சர்வதேச சிறுவர் தினத்தை ஒன்றிணைந்து கல்முனையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. மேற்படி நிகழ்வானது கடந்த திங்கட்கிழமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் இணைப்பாளர் எம்.எம்.சறூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் 07 பொலிஸ் நிலைய சிறுவர்இ பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்களும், கல்வி திணைக்கள அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை அலகு உத்தியோகஸ்தர்கள்இ சட்ட ஆலோசனைக்குழு உயர் அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய இணைப்பாளர் எம்.எம்.சறூக் அவர்கள் கல்முனை பிராந்திய காரியாலயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 2010 சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் முதன் முறையாக சிறுவர் தொடர்பாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்ற அரச மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைத்து இருப்பது வரவேற்கக் கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான ஏற்பாட்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக் குழுவில் ஏ.உதுமாலெப்பை ( சிறுவர் நன்நடத்தை அலகு உத்தியோகஸ்தர் - கல்முனை)எம்.ஐ.கபில் ( சீடோ – அட்டாளைச்சேனை) எஸ்.எல் தாயூடின் ( சீடோ – அட்டாளைச்சேனை)ஆர்.சுகிர்தராஜன் (வலயக்கல்வி அலுவலகம் - கல்முனை)எஸ்.முரளிடாஸ் ( மகாசக்தி அமைப்பு அக்கரைப்பற்று) கே.ஆறுமுகம் அசோகா ( மகாசக்தி அமைப்பு அக்கரைப்பற்று)ஆரிகா காரியப்பர் ( சட்ட ஆலோசகர் - NRC )என்.நிசாந்தி (HHS - அக்கரைப்பற்று )எம்.ஐ.யுனைடின் (SPACE - அக்கரைப்பற்று) எம்.ஐ. அமீன் (SPACE - அக்கரைப்பற்று) ஏ.எல்.எம்.பஸிஸ் ( நேசம் )பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

இக் குழுவின் ஒருங்கிணைப்பு செயற்பாட்டினை மனித அபிவிருத்தி தாபனத்தின்(ர்னுழு) இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் செயற்படுவார் எனவும் தெரிவித்தார்.

இச் செயற்பாடுகளாக அனைத்து பாடசாலைகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு வடிவில் நடத்தப்படுவதுடன் இறுதி நிகழ்வு கல்முனை பிரதேசத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.







Read more...

த.தே.கூ பா.உ ஒருவர் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன அரசியல் அமைபின் 18ம் திருத்தரச் சட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக வாக்களிப்பது என அறிவித்துள்ள நிலையில் இவர் தனித்து இம்முடிவினை எடுத்துள்ளார்.

Read more...

Tuesday, September 7, 2010

இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா?

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறித்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக, அஇஅதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததற்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, 'இரு நாடுகளும் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.

அத்துடன் இலங்கை நமது நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றும் கிருஷ்ணா மேலும் கூறியுள்ளார். இந்தியாவின் அயலுறவு அமைச்சராகவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் குரல், இந்திய அரசின் நீண்ட கால நிலையை வெளிப்படுத்துகிறது என்பதையும், தமிழர்களின் (அது இந்தியத் தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் ஆனாலும்) நலனை விட இலங்கையின் நட்பையே டெல்லி பெரிதாக நினைக்கிறது என்பதும் தமிழர்களுக்கோ அல்லது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கோ தெரியாதது அல்ல.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் (இதன் மூலம்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது) முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம் என்று அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளாரே அதுதான் வேடிக்கையாகவுள்ளது!

இரகசியமாக செய்யப்பட்ட ஒப்பந்தம்!

1974ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கும், அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான (தமிழ்நாட்டின் சேதுபது அரசாட்சியின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்த) கச்சத் தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றே (னiளிரவநன ளைடயனெ) கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.

கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது, அப்போது பேசிய தமிழக உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.மூக்கையாத் தேவர், விஸ்வநாதன் ஆகியோர் கச்சத் தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிப் பேசினர். ஆனால், அதற்கு உரிய பதில் தராமல் இந்திரா காந்தி அரசு தட்டிக் கழித்தது.

ஏனென்றால் கச்சத் தீவு நமது நாட்டின் ஒரு பகுதி என்றால், அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் வேறொரு நாட்டிற்குத் தாரை வார்த்திட முடியாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதைத் தவிர்க்கவே - அதாவது இரகசியமாக வைத்து ஒப்பந்தம் போட்டு இலங்கைக்கு கொடுத்துவிடவதற்காகவே - கச்சத் தீவு இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்டத் தீவு என்று மத்திய அரசு நிலையெடுத்தது. (இத்றகான ஒத்திகை 1956ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வந்திருப்பது பின்னர் தெரிந்து வரலாறு).

தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் இரகசியமாக பேசி, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை 'முறையாக செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம்' என்கிறார் அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா!

அதுமட்டுமல்ல, எல்லைக் கோடு வரைவில் கூட ஒரு மோசடி செய்துதான் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்கரைகளில் இருந்து சம தூரத்தில் புள்ளிகளை வைத்து, அந்தப் புள்ளிகை இணைத்து கோடு போட்டு எல்லை நிர்ணயம் செய்து கொள்வது என்று ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு கச்சத் தீவை இலங்கையின் கடல் எல்லைக்குள் வருவதற்கு ஏற்றார்போல் கோட்டை இழுத்து போட்டார்கள் என்று இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா கூறியுள்ளார்! இப்படியெல்லாம் மோசடி செய்து கொடுக்கப்பட்டதுதான் கச்சத் தீவு.

கச்சத் தீவு அரபிக் கடல் பகுதியில் இருந்து, அங்கு கர்நாடக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை இருந்திருந்தால், இப்படி பேசுவாரா கிருஷ்ணா? தமிழன் உரிமை இருந்தால் என்ன, போனால் என்ன?

Read more...

18ம் திருத்தச்சட்டத்திற்கு எதிரான ஜேவிபி ஆர்பாட்டத்தில் ஜனவெள்ளம்.

அரசியல் யாப்பின் 18ம் சரத்தில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவர் இருமுறைகளே பதவி வகுக்கமுடியும் என்ற வரையறையை முடிவுக்கு கொண்டுவருமுகமாக அரசினால் மேற்கொள்ளப்படும் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக ஜேவிபி யினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பு நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிந்த நிலையில் இவ்ஜனவெள்ளம் ஒன்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கொழும்பு ஆயுர்வேத சந்தியில் ஆரம்பமான இவ்வார்பாட்டம் , பாராளுமன்ற முன்றலை சென்றடைந்துள்ளது.







அதேநேரம் அரசியல் யாப்பின் மாற்றத்தினை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். பிரேத பெட்டி ஒன்றில் அரசியல் யாப்பு மாற்றத்தின் மாதிரிப் பிரதியை நீதிமன்றை சுற்றி சுமந்துவந்த சட்டதரணிகள் பிரேத பெட்டிக்கு தீமூட்டினர்.






Read more...

வெள்ளாமுள்ளிவாய்காலில் 200 கிலோ தங்கம் தோண்டியெடுக்கப்பட்டது. பொன்சேகா.

ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, இன்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் தான் இராணுவத் தளபதியாக சேவை செய்தகாலத்தில் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் 200 கிலோகிராம் தங்கம் மீட்டகப்பட்டதாகவும் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை எவருக்கும் தெரியாது எனவும் கூறியுள்ளார். அத்துடன் தான் இராணுவத் தளபதி என்ற பதிவியிலிருந்து விலகிய பின்னரும் அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது பெரும்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் , கேபி யூடாக மேலும் பல சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை. அண்மையில் கே.பி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தானும் பாதுகாப்புச் செயலரும் ஒரேவிதமான சிந்தனைகளை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கே.பி யின் இக்கருத்தினூடாக நாம் பல விடயங்களை உணர்ந்து கொள்ள முடியும். கே.பி இவ்வாறான கருத்துக்களை போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது தெரிவித்திருந்தால் , 5000 படைவீரர்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கமுடியும் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அத்துடன் போர் காலத்தில் எமக்கு உதவிய கருணா , பிள்ளையான் போன்றோர் ஓதுக்கப்பட்டு இன்று கே.பி க்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரசன்னமாகியிருக்கவில்லை. அரசியல் யாப்பின் 18ம் திருத்தச் சட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து வெளியேறியிருந்தனர். இந்நிலையில் வாக்கெடுப்பு இன்றி அவசரகாலச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read more...

சிறிறங்காவும் பல்டி. ஐ.தே.க யினர் அரசியல் யாப்பு மாற்ற பிரதிக்கு எரியூட்டினர்.

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றிற்கு வெளியே அரசியல் யாப்பு மாற்ற பிரதியை எரித்துள்ளனர். கறுப்பு உடைகள் அணிந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே , ஜெயலத் ஜெயவர்த்தனா, சஜித் பிறேமதாஸ, தயாசிறி ஜெயசேகர , ஜோன் அமரதுங்க ஆகியோர் இச்செயலைச் செய்துள்ளனர்.

இன்று ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , அரசியல் யாப்பு மாற்றம் ஓர் மோசடி எனவும் ஒழுங்கான முறையில் அது மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நுவரேலிய மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்பி சிறிறங்கா அரசின் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை அலறி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய கம்பகா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி (பவா) , தான் 18 திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றத்திற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும் குருநாகல் மாவட்டத்தில் ஐ.தே.க போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினரான நில்வல விஜயசிங்கவும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு உடையில் சத்தியாகிரகம் இருக்கும் காட்சி படத்தில்.

Read more...

இந்திய இராணுவத் தளபதியின் மனைவி ரணவிரு செவண விற்கு விஜயம்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதியின் மனைவி திருமதி. பார்தி சிங் , போரில் அவயங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான பராமரிப்பு இடமான ரணவிரு செவணவிற்கு சென்று அங்குள்ளவர்களை பார்வையிட்டுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதியின் மனைவியை வரவேற்ற இலங்கை இராணுவத் தளபதியின் மனைவி திருமதி மஞ்சுலிகா ஜெயசூரியா , ரணவிரு செவண நிலையத்தில் தங்கியுள்ள இராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை அவருக்கு காண்பித்தார். அத்துடன் அங்குள்ள இராணுவ வீரர்கள் சார்பாக ரணவிரு செவணவின் இயக்குனர் பிரிகேடியர் பெரமுணகமகே நினைவுப் பரிசு ஒன்றினை வழங்கினார்.

Read more...

பாக்.கில் காவல் நிலையம் மீது தற்கொலை தாக்குதல்: 19 பேர் பலி

வட மேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானின் லக்கி மார்வத் டவுனில் உள்ள காவல் நிலையம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் காவல் நிலையம், அருகில் உள்ள மசூதி, அரசு அலுவலகங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் சம்பவத்தில் 19 காவலர்கள் பலியாகியுமுள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. உச்ச நீதிமன்று.

அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிராக ஜேவிபி உச்சநீதிமன்றில் வழக்கு பதிவு செய்திருந்தது. அவ்வழக்கில் யாப்பில் மாற்றம் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டு மக்களின் ஆணையை பெறவேண்டும் என வேண்டப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பினை உச்ச நீதிமன்று அறிவித்துள்ளதாகவும் , அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும் பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையின் அங்கீகாரத்துடன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Read more...

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக ஐ.தே.க பலத்த எதிர்ப்பு. விவாதத்திற்கு இடமில்லை.

ஆழும்தரப்பினால் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு திருத்தத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அரசியல் யாப்பின் திருத்தம் பிரதமரால் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டபின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றின் பாரளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதுடன் இவ்வரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தில் தமது கட்சியினர் பங்குகொள்ளப்போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விவாதத்திற்கு விடப்பட்டுள்ள உத்தேச அரசியல் யாப்பிற்கான அங்கீகாரம் வேண்டி நாளை பாராளுமன்றில் வாக்ககெடுப்பு இடம்பெறவுள்ளது. இவ்வாக்கெடுப்பிலும் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளது. மேலும் தமது எதிர்ப்பினை தெரிவிக்குமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் அங்கத்தவர்கள் பலர் பாரளுமன்ற வளாகத்திற்கு முன்னபாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Read more...

என்னை நாய் போல நினைத்து விமர்சிக்கும் குடியரசுக் கட்சியினர்-ஒபாமா ஆவேசம்

குடியரசுக் கட்சியினர் என்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஒரு நாய் போல என்னை நினைத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர் என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா. மில்வாக்கியில் நடந்த தொழிலாளர் தினக் கூட்டத்தின்போது பேசுகையில் இவ்வாறு குறறம் சாட்டினார் ஒபாமா. அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமா கூட்டத்தில் பேசுகையில், வாஷிங்டன் அதிகார மையத்தை நீண்ட காலமாக கோலாச்சி வந்த சில சக்திகளுக்கு (குடியரசுக் கட்சியினர்) நான் பதவிக்கு வந்தது முதலே பிடிக்கவில்லை. எனக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். என்னால் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியாது.

ஒரு நாய் போல என்னை நினைத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர். இந்த வார்த்தையை நான் எழுதி வைத்துக் கொண்டு சொல்லவில்லை. மனதில் வந்ததை சொல்கிறேன். உண்மையும் அதுதான். மக்களை அவர்கள் மிகச் சாதாரணமாக எடை போட்டு வைத்துள்ளனர். இந்த நாட்டுக்கு அவர்கள் என்ன செய்தார்கள். அதுகுறித்து மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் நினைவிருக்காது என்ற எண்ணம் அவர்களுக்கு. அனைத்தையும் அவர்கள்தான் மாற்றி வைத்தார்கள் என நீங்கள் நினைப்பீர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு. அவர்களால்தான் அனைத்தும் நடந்தது என்று நீங்கள் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

ஆனால் இந்த அரசியல்வாதிகளால்தான் இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார சீர்குலைவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் இப்போது அதை வசதியாக மறந்து விட்டு என்னைக் குற்றம் சாட்டுவதில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று கடுமையாகப் பேசினார் ஒபாமா.

அமெரிக்காவில் தெருவில் விழுந்த விமானம் -ஒருவர் பலி.

அமெரிக்காவின் தெற்கு நிவேதா நகரில் தெருவில் ஒரு குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து லாஸ் வேகாஸ் நகர போலீஸ் தலைவர் ஜான் ஷெகான் கூறுகையில், பைபர் செரோகி என்ற அந்த ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட வி்மானத்தில் 2 ஆண்களும், 2 பெண்களும் இருந்தனர். அந்த விமானம் ஹென்டர்சன் நகரில் உள்ள வீதியில் திடீரென விழுந்து உடைந்து தீப்பற்றி எரிந்தது.

இதில் வி்மானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக தெருவில் சென்ற யாரும் இதில் சிக்கவில்லை. இது பெரும் ஆச்சரியமாக உள்ளது. பைலட் மிகத் திறமையாக விமானத்தை இறக்க முயற்சித்துள்ளார். இதன் காரணமாகவே வீடுகள் மீது விழாமல் தெருவில் விமானம் விழுந்துள்ளது என்றார்.

ஒரு வீட்டுக்குப் பின்புறம் விமானம் விழுந்து தீப்பிடித்துக் கொண்டது. இதில் விமானத்தின் வால் பகுதியைத் தவிர மற்றவை எரிந்து போய் விட்டன.

Read more...

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com