Thursday, December 22, 2011

சிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு!

சிறிரெலோ என்ற குழு இலங்கை புலனாய்வுத்துறையினரால் உருவாக்கப்பட்டதாக பொதுவான கருத்து நிலவி வருகின்றது. இந்நிலையில் குழுவின் தலைவன் உதயன் தொடர்பாக திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. உதயன் புலிகளின் தலைமைச் செயலகத்தினாலேயே மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஈபிடிபி யினுள் நுழைக்கப்பட்டதாக புலிகளின் தலைமைச் செயலகத்தின் நிதிப்பொறுப்பாளர் பாண்டியன் தெரியப்படுத்தியுள்ளார்.

புலிகளின் தலைமைச் செயலகம் எனப்படும் பிரிவின் நிதிப்பொறுப்பாளனான பாண்டியனுக்கும் அனைத்துலகச் செயலகத்தின் செயற்பாட்டாளன் சுதனுக்குமிடையே இடம்பெற்ற தொடர்பாடலில் , வரவுசெலவு தொடர்பாக பேசப்பட்டபோது உதயனை கொழும்புக்கு அனுப்பி ஈபிடிபி யினுள் நுழைப்பதற்கு பெருந்தொகையான பணத்தினை தான் செலவிட்டதாக பாண்டியன் தெரிவிக்கின்றார். (ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.)



இவ்வாறு ஈபிடிபி யினுள் நுழைக்கப்பட்ட உதயராசா பின்னர் தனித்துச்சென்று சிறிரெலோ எனும் நாமத்தைச்சூட்டிக்கொண்டார். அதன் பெயரால் பல்வேறு தேர்தல்களில் அரச அனுசரணையுடன் போட்டியிட்டார். ஆனால் எந்தவொரு தேர்தலிலும் ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு முயற்சித்து வருகின்றார். இது தொடர்பாக மாவை சேனாதிராஜா , அடைக்கலநாதன் ஆகியோருடன் பலமுறை பேசியுள்ளார். ஆனால் இழிபுகழ்பெற்றுள்ள இவரை உடனடியாக கூட்டமைப்பில் சேர்த்துவிட முடியாது என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், தற்போது நிலைமைகள் சற்று சாதகமாக உள்ளதாக நம்பப்படுகின்றது.

அதேநேரம், இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வருவதானால் சிறிரெலோ என்கின்ற வாக்கியத்தை விட்டுவிட்டு ரெலோவின் உறுப்பினராக வரமுடியும் என அடைக்கலநாதனால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், உதயனை சிறிரெலோ என்ற நாமத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அனுமதித்தால் குட்டிமணிரெலோ, தங்தத்துரைரெலோ என்று இன்னும் பல நாமங்களுடன் பலரும் வருவார்கள் என்றும் கூறப்பட்டதாம்.

அவ்வாறு சிறிரெலோ என்ற வாக்கியத்தை விடுவதானால், தனக்கு ரெலோவில் ஏதாவது பதவி ஒன்று தரவேண்டும் எனக் கேட்டாராம் உதயராசா. அப்போது நீர் ரெலோ வில் இருக்கும்போது என்ன பதவி வகித்த நீர் எனக் கேட்கப்பட்டதாம். சாதாரண ஓர் உறுப்பினராக இருந்த நீர் தற்போதைக்கு அவ்வாறே தொடரவேண்டும் எதிர்காலத்தில் பார்க்கலாம் எனச் சொல்லப்பட்டதாம்.

1 comments :

Anonymous ,  April 20, 2019 at 12:31 PM  

இந்த DOG தான் கோவிலுக்குள் பிள்ளைகளுடனும் துப்பாக்கியுடனும் திரிகிறது

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com