Friday, January 20, 2012

வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.

'நாங்கள் இருவரும் குருணல் மருந்தை குடித்து உயிரை விடுகின்றோம். எங்கள் இருவரது உடலையும் ஒரு பெட்டிக்குள்ளாக வைத்து ஒரு ரோட்டுக்கரை சுடலையில எல்லாரும் பார்க்கும் படியாக தாட்டு கல்லை கட்டி எங்கட பெயரை எழுதி விடவும். நாங்கள் இருந்த வீட்டுக்கோலுக்குள்ளே எங்கள் உடல்களை வைத்து எடுக்க வேண்டும் வீட்டுக்கு நேரேயே பந்தல் போடவேண்டும்இது எங்கள் ஆசை இதை நிறைவேற்றி வையுங்கள்'

இது ஒன்றும் சினிமாவிற்காகவே அல்லது தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே எழுதப்பட்ட ஒரு வசனமே அல்ல மாறாக மரணத்தறுவாயில் நின்று வாழ்விழந்த ஒரு முன்னாள் போராளியின் இறுதி மூச்சுக்கணங்களில் வெளி வந்த மனக்குமுறல்கள்.

கடந்த 16ம் திகதி முள்ளியவளை பால்பண்ணை முறிப்பு என்ற இடத்தில் நிரஞ்சன் 29 வயது , சங்கீதா 27 வயது என்கின்ற இரு இளம் குடம்பம் தற்கொலை செய்து கொள்ள முதல் எழுதிவைத்த மரணசாசனக்கடித்தத்தில் அமைந்திருந்த வசங்களே அவை.

ஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றையும் இன்று முழு மக்களையும் ஆக்கிரமித்து நிர்கின்ற ஊடக யாம்பவான்கள் உங்களுக்கு மறைக்க முனைகின்ற ஒரு செய்தியை வெளிப்படையாக சொல்லி வைக்கின்றோம். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்த அவர் புனர்வாழ்வு பெற்று திரும்பி தனது வாழ்க்கையை வாழ முடியாமல் வாழ்க்கையை பிடிக்காமல் தனது வாழ்கைத்துணையுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்

இவர்கள் எழுதிய கடித்தில் முதலாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ள விடயம் என்ன தெரியுமா? 'எனக்கு இந்த வாழ்க்கை வெறுத்து விட்டது' அந்தளவிற்கு என்ன நடந்ததென்று உங்களால் ஊகிக்க முடியாது என்று எனக்கு தெரியும் ஆனால் நாம் இங்கு கண்ணாராக் கண்டதையே மட்டும் உங்களுக்கு சொல்லுகின்றேன்.

முன்னாள் பேராளிகள் என்று சொல்லும் போது அவர்கள் யார்? இன்று தழிழ் தேசியம், விடுதலை, தழிழ்ஈழம் என்று வெளிநாடுகளில் இருந்து மக்களின் பணத்தை கொள்ளையிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் புலிபிணாமிகளின் வியாபாரத்திற்காக தங்கள் வாழ்க்கையை ஆகுதியாக்கிய அப்பாவி இளைஞர்கள் மட்டுமல்ல இன்று நம் மனங்களில் துயில் கொண்டிருக்கும் அந்த ஜீவன்களின் நினைவுகளைச் சுமந்தவர்களால் யுத்தகளத்தில் நின்று இறுதி கணம் வரை பேராடியவர்கள்

பல்வேறு காரணங்களால் இவர்கள் இராணுவத்திடம் சரணடையவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இராணுவத்திடம் சரணடைந்தபோதும் ஏன்? சரணடைய முன்னர் கூட பலர் தாம் செத்து விட்டதாகவே எண்ணி களத்தில் மயக்கமடைந்தவர்கள், இராணுவ வைத்தியசாலைகளில் உயிருடன் இருந்தபோது ஆச்சரியத்தோடு பார்த்தவர்கள், இவ்வாறு பல சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு இருந்தது தற்கொலை செய்து கொள்வதற்கு. யுத்தகளத்தில் எல்லாம் முடிந்தது என்று இவர்கள் நினைத்திருந்தாலோ அல்லது வாழ்க்கை வெறுத்து விட்டாலோ இவர்கள் அங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அல்லது புனர்வாழ்வின் நடவடிக்கைகள் நடைபெற்றபோது வாழ்வு வெறுத்திருந்தால், அங்கு ஒரு இராணுவத்தை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் ஆனால் அப்போது தற்கொலை செய்ய தோன்றாத இவர்களுக்கு இப்போது இதைச் செய்திருக்கின்றார்கள் என்றால் இதற்கு யார் காரணம்.

வாழ்வதற்கு மிகுந்த ஆ ர்வத்துடன் தனது மனதுக்கு பிடித்தவர்களை கைப்பிடித்தவர்கள் ஏன் இவ்வாறு செய்து கொண்டனர்? இதற்கு புலம்பெயர் புலிப்பினாமிகள் பொறுப்பாளிகள் அல்லரா?

நாம் நாட்டிலே எஞ்சியிருக்கிற போராளுகளுக்கு உதவுகின்றோம் என இன்றும் வசூலிக்கின்றவர்கள் , அதைச் செய்திருந்தால், இக்கொலை நடத்திருக்குமா? புலி முத்திரையை வைத்துக்கொண்டு பணம் கறக்கும் அந்த பணப்பிசாசுகள் என்ன? செய்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களது பணத்தை தங்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்காகவும் தங்கள் மனைவி பிள்ளைகளது வாழ்க்கைக்காகவும் செலவு செய்கின்றனர்.

என்ன நம்ப முடியவில்லையா? கேணல் ரமேஷின் மனைவியை நாட்டை விட்டு வெளியே கொண்டு போவதற்கு செலவான கோடி ரூபாய்கள் எத்தனை தெரியுமா? ஆவ்வாறு புலித்தலைவர்களின் குடம்பங்களை வெளியே கொண்டுபோவதற்கு எத்தனை கோடிகள் தெரியுமா? ஏன் இவர்கள் மாத்திரம்தான் போராளிகளா? ஏன் இந்த ஓரநீதி வழங்களை சமமாக எப்பபோது பங்கிடப்போகின்றார்கள்.

துமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணம் எங்கே போனது? ரி.ஆர்.ஆர். ஒ வின் பொறுப்பாளர் ரெஜியின் மனைவி இன்று முகாமிலிருந்து வெளியே கொண்டு போகப்பட்டு தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு செகுசு பங்களாவில் தங்கி இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். முக்களின் பணத்தை கொண்டு ரிஆர்ஓ ரெஜி அவன் மனைவியை பாதுகாத்துள்ளான். இவனால் இங்கே உள்ள பாவப்பட்ட ஜீவன்களுக்காக ஒரு ரூபாயைக்கூட ஒதுக்க முடியவில்லை.

இன்று புலிகளின் சொத்து எனப்படும் மக்கள் சொத்தை யார் அனுபவிக்கின்றனர், புலம்பெயர் தேசத்து பினாமிகளும், இங்கிருந்து தப்பியோடிய அதேவர்க்கத்தைச் சேர்ந்த கயவர்களுமாக இணைந்து அனுபவிக்கின்றனர். இந்தப்பணங்கள் யாருடைய பணங்கள் புலிகளுடையதா? இல்லை உங்களுடையது நீங்கள் உண்டியலிலும் சாப்பிடாமல் உங்களை வருத்தி கொடுத்த பணங்கள். இப்போது வன்னி மக்களுக்கு, முன்னாள் போராளிகளுக்கு என்று ஒரு தொகை பணத்தை உங்களிடம் கேட்கின்றனர். ஆனால் இங்கு நான் சந்தித்த எந்த போராளியும் இவர்களிடமிருந்து ஒரு பைசா கிடைத்ததாக தெரிவிக்கவில்லை.

இங்கு ஒரு முன்னாள் பேராளி மட்டுமல்ல யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் நாளாந்த கஞ்சி குடிக்க முடியாமல் என்ன செய்வது யாராவது ஒரு தொழில் செய்ய உதவி செய்ய மாட்டார்களா ? என்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பக்கம் ஒடித்திரிவதும் அரசாங்கம் கொடுக்கும் சின்ன சின்ன உதவிகளையும் பெற்று கொண்டு வயிற்றை கழுவிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களின் பெயரால் அங்கே பிச்சை எடுப்பதை அறிகின்றபோது கொதித்து எழுகின்றனர்.

இந்த தூபாக்கிய நிலையில் தமிழ் ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றது? தமிழ் தேசியக் கூத்தமைப்பின் நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பாராளுமன்றில் குமுறல்! சீற்றம்! என்று தலையங்கங்கள் போட்டு செய்தி வெளியிட்டு மக்களை இன்றும் ஏமாற்றி பிழைத்து;ககொண்டிருக்கின்றன.

இவர்களுக்கு சாவின் விளிம்பில் நின்று பேராடிக்கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகள் புரியாது. அரசாங்கம் முன்னாள் போராளிகள் மீதான உடும்பு பிடியை ஒரளவு தளர்த்தி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றை வெளிநாடுகளில் இருந்து ஒரு சில புலிப்பயங்கரவாதிகளும் அவர்கள் பினாமிகளும் இன்றும் புலி பூச்சாண்டி காட்டியும் போர்க்குற்றம் என்ற புதிய புலுடாவை காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்

இவர்களுக்கு நீங்கள் இன்னமும் நிதி உதவி செய்யத் தான் போகின்றீர்களா? புலியை அழித்தொழி என்று அரசின் பின்னால் நின்ற நாடுகள் இன்று அரசாங்கத்தை எந்தளவு தண்டிக்கும் என்று சிந்திப்பீர்களா? இல்லவே இல்லை. அவர்கள் நம்மை வைத்து தங்கள் சுயலாப நலன்களை செய்து முடித்துக்கொண்டு செல்கின்றனர். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பணத்தையும் இங்குள்ள முன்னாள் போராளிகளுக்கு கொடுங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்கள் அவர்கள் வாழ்வார்கள் உங்களையும் வாழ்த்துவார்கள்

நீங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஒரு முறை மட்டும் சிந்தித்து செயல் படுத்துங்கள் இன்று ஒரு போராளிக்கு மட்டும் வாழ்க்கை வெறுத்த கதையை நாம் உங்களுக்கு சொல்லியிருக்கின்றோம் ஆதாரங்களுடன் ஆனால் சாவின் விளிம்பில் எத்தனையோ முன்னாள் போராளிகள் அங்கவீனர்களாகவும் வாழ்விழந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்காக தமிழ் தேசியக் கூத்தமைப்பினரும் சரி நாடுகடந்த தழிழீழ அரசும் சரி எதையும் செய்யவில்லை மாறாக தாங்களும் தங்கள் குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தேச விடுதலைக்காய் தம் உயிரை துச்சமாய் எண்ணியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் இல்லை. முல்லைத்தீவில் இடம்பெற்ற தற்கொலை நாளை தழிழ் பிரதேசங்கள் எங்கும் இடம்பெறும் நீங்களும் அதற்கு பாத்திரவாளிகளாயிருப்பீர்கள்

புலம்பெயர் தேசத்திலே இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிகழ்வும் இங்குள்ள மக்களின் வாழ்வை சிக்கலில் தள்ளும் செயலே. மரத்தால விழந்தவனை மாடு ஏறி மிதிக்கிற நிலை தான். தொடர்ந்தும் கண்காணிப்பு சந்தேகப்பார்வை என்ற நிலைக்குள் இம்மக்களை தள்ளுகின்ற செயல்களே.

இந்த மரணத்திற்கு என்ன சொல்லப்போகின்றனர் வாழ்க்கை வெறுத்தது எங்கே வெறுத்தது ? வெளியே வந்த போது தான் வெறுத்திருக்கின்றது. வேளியே வந்து தனது வாழ்வினை ஆரம்பித்த அந்த அங்கவீனனை இந்த முடிவுக்கு புலம்பெயர் புலிகள் கொண்டு சென்றார்களா? உள்ளே இருந்தபோது வெறுத்திருந்தால் வெளியே வந்து திருமணம் செய்திருக்க மாட்டான்.

இவ்வாறு வெளியே வந்தவர்கள் தமது வாழ்வினை தொடர்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை செய்தது என்ன? ஊள்ளே உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு குரல் கொடுக்கிறோம் கதைக்கிறோம் என்கின்றவர்கள், வெளியே வந்துள்ளவர்களுக்கு என்ன செய்கின்றனர். இவர்களை சீண்டத்தகாதவர்களாக ஒதுக்குகின்றனர். இதுவே இந்த விரக்திக்கு காரணம்.

இறுதியாக இவர்கள் எழுதி வைத்த கடிதங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தொடர்சியாக தகவல்கள் வெளிவரும்.








4 comments :

Anonymous ,  January 20, 2012 at 9:28 PM  

Normally this web site is very negative, but correct point is the people collected money here is are bad, they some time threatened people to get money-they did that as a business.

But, only few people are bad , lot of people are good people-Be positive-be a tamil-please do not support our enimy-Thank you

Anonymous ,  January 21, 2012 at 6:40 AM  

I feel soo sad. God blease them.

ARYA ,  January 21, 2012 at 10:49 PM  

LTTE medias such as tamilwin and athirvu hided this news.

Anonymous ,  February 4, 2013 at 9:39 AM  

if it happened by tiger to tiger we can feel how the tiger did the torture to others including muslims

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com