Wednesday, March 6, 2019

ஆசிரியர் கலாசாலை​ பஸ் விபத்து - ஒருவர் பலி - 35 பேர் வைத்தியசாலையில்

நேற்று இரவு 9.15 அளவில் மாவனெல்லை – பஹல கடுகன்னாவ இபெரனி அம்பலம பகுதியில், பஸ் ஒன்று விபத்துக்குளாகியதில் ஒருவர் பலியாகியதுடன் 35 பேர் அளவில் காயமடைந்துள்ளார். அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை​யை சேர்ந்தோர் மாணவ ஆசிரியர்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்ற பஸ்சே, மின்கம்பமொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றார்கள்.

உயிரிழந்தவர் அக்கரைப்பற்றை சேர்ந்த 32 வயதுடைய பஸ்ஸின் நடத்துனரே என்று தெரியவருகின்றது. காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும் அடங்குகின்றார். விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஆசிரியர் கலாசாலையின் 54 மாணவர்கள் பஸ்ஸில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com