சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிளிநொச்சியில் இராணுவப் பயிற்சி!
இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரின் ஆலோச னைக்கு அமைய 50 சுங்க அதிகாரிகள் அடங்கிய குழு வொன்றுக்கு கிளிநொச்சியில் இருக்கும் சுங்கத் திணைக் களத்தின் பயிற்சி நிலையத்தில் ஒரு வாரகாலம் இராணு வப்பயிற்சிகள் வழங்கப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பயிற்சி நெறியில் துப்பாக்கிச் சுடுதல் மட்டுமல்லாது ஆயுதங்கள் பற்றிய பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இவர்களின் பாதுகாப்பு கருதி எதிர்காலத்தில் சுங்க அதிகாரிகளுக்கு உரிய முறையிலான இராணுவப் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment