Friday, January 24, 2014

மண்டேலாவின் சிலை காதுக்குள் செதுக்கப்பட்டுள்ள முயலை அகற்ற நடவடிக்கை!

பிரிட்டோரியா நகரில் கடந்த 16 ஆம் திகதி திறந்து வைக் கப்பட்ட தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிரமாண்டமான வெண்கல சிலையொன் றின் காதுப்பகுதிகள் செதுக்கப்பட்டுள்ள முயல் உருவத்தை அகற்றுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிலையை உருவாக்கியவர்கள் தமது கையொப்பத்தை சிலையின் காற்சட்டைப் பகுதியில் பொறிப்பதற்கு அனுமதிக்படாததால் தமது சின்னத்தை சிலையின் காதுக்குள் பொறிதுள்ளதாக தென்னாபிரிக்க பத்திரிகை யொன்ற செய்தி வெளியிட்டது.

இதே நேரம் இச்சிலையை நிர்மாணித்த சிற்பிகள் இத்தகைய முயல் உருவத்தை சிலைக்குள் பொறித்தமை தமக்குத் தெரியாது என தெரிவித்த தென்னாபிரிக்காவின் கலை கலாசார திணைக்களம் முயல் உருவம் செதுக்கப்பட்டமைக்காக சிற்பிகள் மன்னிப்பும் கோரியுள்ளதாக கலை, கலாசார அமைச்சர் போல் மாஷாடில் தெரி வித்துள்ளார்.

இந்தநிலையில் சிலையின் காதுக்குள் உள்ள முயல் உருவத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com