Thursday, November 29, 2012

இராணுவத்தினரையும் விட்டு வைக்காத டெங்கு நோய்- பலர் வைத்தியசாலையில்

வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சலினால் 21 இராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களின் 13 பேர் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் அறிவித்துள்ளது.

வவுனியா இராணுவ முகாமிலிருந்து வருகை தந்த இராணுவத்தினர் சிலருக்கே டெங்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் .தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் இவர்கள் வெகுவிரைவில் சிகிச்சைப் பெற்று திரும்புவார்கள் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com