Thursday, November 29, 2012

இலங்கையில் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் -அமெரிக்க தூதரகம் கவலை

இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனைகொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே இவ்வறிக்கையை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ளது.

வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும்.

இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.

பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் நாம் அரச அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com