ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்.. அல்பேட் ஜூலியன் (பாகம் 3)
தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் யாழ் மாவட்டசபை உறுப்பினரும், 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டவருமான நடேசு என்பவர் எம்முடன் கைதியாக இருந்தார். அவர் மீது புலிகள் கூறும் குற்றம் என்னவெனில் வட்டுக் கோட்டைப் பகுதியில் தலைமறைவாக இயங்கி பல பொதுமக்களை கொலை செய்து வந்த தும்பன் என்ற புலியை இந்திய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்காக விருந்து வைத்துக் கொண்டாடினார் என்பதாகும். ஆனால் தான் அப்படி விருந்தொன்றும் வைக்கவில்லை என அவர் மறுத்தார்.
இன்னுமொரு கைதி ஸ்கந்தவரோதயா கல்லூரியின் உயர் தர மாணவன். இவரின் வீட்டில் இவர் துப்பாக்கியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று புலிகளால் கண்டெடுக்கப்பட்டது. அந்த படத் தில் உள்ள துப்பாக்கி எங்கே? அதை மறைத்து விட்டார் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் சம்பவம் பற்றி குறிப்பிட்ட கைதி அழுதபடி எனக்கு சொன்னார். துப்பாக்கியுடன் புகைப்படம் எடுக்கவேண்டு மென்ற ஆசையினால் ஒரு இயக்க நண்பரின் துப்பாக்கியை வாங்கி புகைப்படத்திற்கு நின்றாராம். அந்த புகைப்படம் புலிகளிடம் சிக்கியதால் தான் இப்போ சிறையிலிருக்கிறாராம்.
ஆனைக்கோட்டைச் சந்தியில் ஒரு அமைதியான குடும்பஸ்தருக்கு மூன்று வீடுகள் சொந்தமாக இருந்தது. அதில் இரு வீடுகளை அமைதிப்படையினர் பொறுப்பேற்று முகாமிட்டிருந்தனர். அவ்வீடுகளுக்குரிய மாதாந்த வாடகைப்பணத்தை இவர் பெற்று வந்துள்ளார். அந்த முகாமின் ஒரு பகுதியில் E.P.R.L.F. முகாமும் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்திய அமைதிப்படை வெளியேறியபோது முகாம் கைவிடப்பட்டது. அங்கு இருந்த காப்பரண்களுக்குப் பாவிக்கப்பட்ட கல், மண், இரும்புகள் போன்றவற்றை உழவு இயந்திரம் ஒன்றின் மூலம் வீட்டு உரிமையாளர் அகற்றியுள்ளார். சில நாட்களின் பின் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். E.P.R.L.F. முகாமிலிருந்து ஆயுதங்கள் கடத்தி புதைத்து வைப்பதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
பண்டத்தரிப்பு சந்தியில் சிகை அலங்காரம் செய்யும் கடை வைத்திருந்த ஏழைத் தொழிலாளி ஒருவரும் எம்முடன் சிறையிலிருந்தார். இவரின் கடை பண்டத்தரிப்பு முகாமுக்கு மிக அருகில் இருந்தது. இவரிடம் சிகை அலங்காரம் செய்வதற்கு EPRLF. உறுப்பினர்கள் செல்வது வழக்கம். அந்த வகையால் அவர்களுடன் இவர் பழகிவந்திருக்கிறார். முகாம் கைவிடப்பட்டதும் புலிகளினால் கைது செய்யப்பட்டு E.P.R.L.P. க்கு துப்பு கொடுத்து வந்ததாகவும் அவர்களுக்கு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
E.P.R.L.F. இயக்கம் காரைநகர் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியபோது குருநகர் தொடர்மாடியில் இலங்கை இராணுவம் முகாமிட்டிருந்தது. இராணுவத்தை முகாமுக்குள் முடக்கும் நோக்கத்துடன் முகாமைச் சுற்றி கண்ணி வெடிகளை E.P.R.L.F. வெடித்துக்கொண்டிருந்த சமயம் பேணாட் என்னும் பொது மகன் ஒருவர் கண்ணிவெடியில் அகப்பட்டு காலில் காயப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்று சில வருடங்களின் பின் புலிகளின் காட்டுத் தர்பாரின் போது பேணாட் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலினால் காயம் பட்டதாகப் பொய் கூறிவிட்டார். உண்மைச் சம்பவத்தை சொன்னால் தன்னையும் ஒரு E.P.R.L.F. உறுப்பினர் என தீர்மானித்து சுட்டுக்கொன்று வீடுவார்களோ என்ற பயத்தில் பொய் கூறிவிட்டார். ஆனால் உண்மையில் விபத்து நடந்தது எப்படி என்பதை அறிந்திருந்த புலிகள் அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள். இது பற்றி அவரின் மனைவிக்கு சமீபத்தில் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கங்களுடன்எவ்வித தொடர்பு மில்லாத அப்பாவி பயத்தின் காரணமாக சிறியதோர் பொய் சொன்ன ஒரே காரணத்துக்காக புலிகளினால் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டு விட்டார்.
குருநகர் கடற் தொழிலாளருக்கு தொழிற்சங்கம் ஒன்று அமைப்பது சம்பந்தமாக E.P.R.L.F. இயக்கத்துடன் தொழிற்சங்க தொடர்புகளை மேற்கொண்டு வந்த கடற்தொழிலாளி ஒருவரும் சிறையில் வாடுகிறார். இவர் கொஞ்சம் வசதி படைத்தவர். இவரின் சொத்துக்கள் அனைத்தும் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. EPRLF இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தொழிற்சங்கம் அமைக்க முயன்றதாகவும் மேற்படி நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் பிரதேச முகாமையாளர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் இந்திய உளவுப் பிரிவான "றோ" வை சேர்ந் தவர் என குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் புலிகளினால் சீர்குலைக்கப்பட்ட வங்கிச் சேவைகளை சீராக செயல்பட வைப்பதற்காக இந்திய அமைதிப்படை உயர் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து வந்ததே இவர் செய்த குற்றமாகும்.
வேலணை சந்தியில் சிறு தையற்கடை வைத்திருந்த இஸ்லாமிய சகோதரர் ஒருவரும் சிறையிலடைபட்டிருந்தார். இவரின் கடை அமைதிப்படை, EPRLF. முகாம்கள் அமைந்திருந்த பகுதியிலேயே இருந்தது. அவர்களின் தையல் வேலைகளை இவர் செய்து வந்திருக்கின்றார். E.P.R.L.F. விற்கு சீருடை தைத்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் சவக்கிடங்கில் வேலை செய்து வந்த ஆறு சிற்றுாழியர்களை புலிகள் கைது செய்திருந்தார்கள். இந்திய அமைதிப்படையினால் கொல்லப்படும் புலிகளின் பிணங்களை வைத்தியசாலைச் சவக்கிடங்கில் வைத்திருக்கும் போது அவற்றைத் தாம் கடத்திச் செல்வதற்கு ஒத்துழைக்காத காரணத்துக்காக மேற்படி அறுவரும் கைது செய்யப்பட்டார்கள்.
வேலணை காட்டுப் பகுதியில் கிராம அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வந்த நாதன் என்பவர் கிராம அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்களை EPRLF இயக்க மேற்படி பகுதி " அமைப்பாளர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இக்கலந்துரையாடல்களின் போது புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை, அத்தாட்சிப்படுத்தி நீ EPRLF. ஆதரவாளன். பல புலிகளைக் காட்டிக் கொடுத்தாய் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.
புலிகளினால் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின், உதவியாளர் நெல்லிநாதன் வயது சுமார் 65 பருத்த சரீரம் கொண்ட இவர் கடுமையான நோயாளியும் கூட. யாழ் மாவட்ட EPRLF. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளராக இருந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார். இவர் மூலம் பல தகவல்களைப் பெறமுடி யும் என புலிகள் நம்பியிருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் அவர்கள் பதவியேற்று யாழ நகருக்கு வந்த போது பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவருக்கு மாலை அணிவித்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலே கூறப்பட்டவை ஒரு சில சம்பவங்களே” ஆனால் வெறும் ஐயப்பாட்டிலும், கோபதாபங்களிலும் கூட பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இப்படியான குற்றச் சாட்டுக்களின் பேரில் 3000க்கு மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் வடமாகாணம் முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். பிள்ளை தமக்கெதிரான இயக்கத்திலிருந்தால் தந்தை கைது செய்யப்படுவார். தந்தை இல்லாவிடில் தாய் கைதாகி பெண்களுக்கான சிறையிலடைக்கப்படுவார்.
EPRLF, ENDLF. TELO, EROS, PLOT -ஆகிய இயக்க உறுப்பினர்கள் சிலரும் கைதாகி சிறையிலிருந்தனர். சாவகச்சேரிப்பகுதியில் மூன்று பெரிய சிறை முகாம்கள் அச்சமயத்தில் இருந்ததாக அறிந்தேன். நான் இருந்த சாள்ஸ் சிறைமுகாம், பொஸ்கோ சிறை முகாம், பெண்களுக்கான தனி சிறை முகாம். இப்பெண்கள் சிறையில் மாற்று இயக்க உறுப்பினர்களின் தாய்மார், சகோதரிகள், மனைவிமார், சிறு பிள்ளைகள் ஆகியோர் அடைக்கப்பட்டிருநதனா.
சாள்ஸ் முகாமில் நான் இருந்த போது பொறுப்பாளர் சாள்ஸ் பல தடவை என்னை அடித்தார். அவர் ஒரு மனோ வியாதி பிடித்தவர் போன்றோ அல்லது வெறி பிடித்தவர் போன்றோ தான் செயல்படுவார். யாராவது கைதியைப் பிடித்து அடித்துக் கொண்டிருப்பது தான் அவரின் வேலை, தூஷண வார்த்தைகளைத் தவிர அவருக்கு வேறு பேச்சே தெரியாது. பத்து அடி நீளம் பன்னிரண்டு அடி அகலமான சிறிய அறை ஒன்றுக்குள் இருநூறு கைதிகளை வைத்து சுமார் பத்து மணித்தியாலங்கள் அடைத்துவைப்பார். ஒவ்வொரு நாளும் பத்து பத்து கைதிகளைத் தெரிந்தெடுத்து மாறுகால் மாறுகையை ஒன்றாகப் பிணைத்து விலங்கு பூட்டுவார். அதாவது வலது காலுடன் இடது கையைப் பிணைந்து விலங்கு பூட்டுவார். அப்படிவிலங்கிடப்பட்ட கைதிகள்நடந்து திரிய விடப்படுவார்கள். அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு நடந்து திரிவதைப்பார்த்து சிரித்து மகிழ்வார். கைதிகளை அடித் துத் துன்புறுத்திக் கொண்டு சிரித்து கேலி பண்ணுவார். "டேய் பு:மக்களே உங்கள் அம்மாமாரை இந்திய ஆமிமாருக்கு விட்டனிங் களாடா?” எனக் கேட்டு அடிப்பார். ஒரு நாளைக்கு பத்துப் பேருக்காவது மண்டை உடைக்காவிட்டால் தனக்குத் தூக்கம் வராது எனக் கூறி கைதிகளின் மண்டையை பீப்பர் சிலாகையால் அடித்து மண்டையை உடைப்பார். இப்படியான வெறிபிடித்த பொறுப் பாளர் ஒருவரின் கீழ் தான் சாவகச் சேரியில் நான் கைதியாக இருந்தேன்.
ஒரு நாள் எல்லாக் கைதிகளும் வரிசையாக நிறுத்தப்பட் டோம். சிறிது நேரத்தில் விசாரணைக்குப் பொறுப்பாளராக இருந்த சலீம் எனும் புலி ஒருவர் தனது மெய்க்காப்பாளர்கள் சகிதம் வந்து எம்மைப் பார்வையிட்டார். "உங்களைச் சந்திக்க EPRLF பிரமுகர் ஒருவர் வருகிறார். அவர் சொல்வதுபோல் நீங்கள் நடந்துக்கொண்டால் உங்களுக்கும் நல்லது. எமக்கும் வேலைகள் எளிதாக இருக்கும்" என்றார்.
முகுந்தன் என்ற அந்த EPRLF. உறுப்பினர் கையிலும் காலிலும் விலங்கிடப்பட்ட நிலையில் ஆயுதம் தாங்கிய புலிகள். காவலாக வர அழைத்து வரப்பட்டார். அவர் பலமாகத் தாக்கப் பட்டிருந்ததுடன் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார். அவர் சகல கைதிகளுக்கும் முன் நிறுத்தப்பட்டு சொற்பொழிவாற்ற விடப்பட்டார்.
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இனி வேறு இயக்கங்கள் எதுவும் இயங்க முடியாது எனவே புலிகளுடன் ஒத்துழைக்கும்படியும் அப்போதுதான் உங்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் சொன்னார். ஆயுதங்கள் இருந்தால் ஒப்படைக்கும்படியும், ஆயுதங்கள் புதைத்து வைத்திருந்த இடங்கள் தெரிந்தால் காட்டிக் கொடுக்கும்படியும் கூறினார். இவரின் பேச்சுக்களில் புலிகளின் மிரட்டல்களுக்காகத்தான் செயற்ப்படுகிறார் என்பதை சொல்லாமல் சொன்னார். அதன் பின் இயக்கங்களில் முக்கியப்பொறுப்புக் களில் இருந்தவர்களை அடையாளம் காட்டும்படி ஒரு அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. முகுந்தன்தான் கைதிகளை அடை யாளம் காட்டினார். தாங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு கைதிகளை அடையாளம் காட்டவில்லை எனக் கருதிய புலிப்பொறுப்பாளர் சலீம் முகுந்தனை சகல கைதிகளுக்கும் முன்பாக வைத்து பொல் லினால் தாக்கினார். அந்தப் பொல்லு முறிந்ததும் அருகிலிருந்த கதிரையினால் துரக்கி அடித்தார். முகுந்தனின் தலையிலும், முகத் திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதன் பின் முகுந்தன் பல கைதிகளை அடையாளம் காட்டினார். அதில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தனியாக அடைக்கப்பட்டார்கள். முகுந்தன் எங்கு கொண்டு செல்லப்பட்டாரோ தெரியாது. சிறையில் இருக்கும் போது எமக்கு வெளி உலகில் என்ன நடக்கிறதென்பதே தெரியாது. நாள் தேதி எதுவுமே தெரியாது.
இன்று சிவராத்திரி எல்லாக் கைதிகளும் நித்திரை கொள்ளாமல் இருக்க வேண்டுமென பணிக்கப்பட்டனர். இரவானதும் கைதிகள் எல்லோரும் கணக்கெடுக்கப்பட்டனர். பின்னர் புலிகளின் இயக்கப் பாடல்களை ஒலிபரப்பினார்கள் அதன் பின் ஒவ்வொரு கைதிகளாக கூப்பிட்டு சினிமாப் பாடல்களைப் பாடும் படி கேட்டார்கள். பாடமுடியாதவர்களையும் வெட்கப்பட்டவர்களையும் அன்று இரவு முழுவதும் முட்டுக்காலில் இருத்தினார்கள்.
விரைவில் உங்களை யெல்லாம் விடுதலை செய்யப்போகிறோம் என அங்கு காவலிற்கு நிற்கும் புலிகள் கைதிகள் மத்தியில் அடிக்கடி கூறிவந்தார்கள். ஒரு நாள் இரவு இருநூறு கைதிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டது. உங்களை நாளை விடுதலை செய்யப் போகிறோம் அதனால் யாழ் நகரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கூறி இருவரிருவராக கால்களை சங்கிலியால் பிணைத்து அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரத்தில் வெளியில் கனரக வாகனங்கள் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. மறு நாளும், அதற்கு மறுநாளும் இவ்விதமாக மெத்தம் அறுநூறு பேர் விடுதலை என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டார்கள். அடுத்த நாள் எனது பெயரும் வாசிக்கப்பட்டது. மனம் பெரிதும் மகிழ்வுற்றது. விடுதலை. அது எவ்வளவு இன்பமானது என்பது அந்த நேரத்தில்த்தான் தெரிந்தது.
என்னுடன் அறுபது வயது வயோதிபர் ஒருவர் பிணைக்கப்பட்டார். அவரின் வலது பக்கக்காலும், எனது இடதுபக்கக் காலும் சங்கிலியால் ஒன்றாக பிணைக்கப்பட்டு இரும்புப்பூட்டு போடப்பட்டது. அன்று பெயர் வாசிக்கப்பட்ட இருநூறு கைதிகளும் இருவர் இருவராக அழைத்துச் செல்லப்பட்டு முகாமின் முன் பக்கம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று லொறிகளில் ஏற்றப்பட் டோம். சுற்றிலும் மூடி அடைக்கப்பட்ட லொறி ஒவ்வொன்றிலும் சுமார் 6க் கைதிகள் வீதம் ஏற்றப்பட்டோம். பின் கதவும் மூடப் பட்டது. காற்றுவர சிறு துவாரம் கூட இல்லாத நிலையில் பிரயாணம் ஆரம்பமாகியது. காற்று வர வழி இல்லாத படியினால் உள்ளே புழுக்கமாக இருந்தது. கைதிகள் மிக மிக நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்ததால் ஒரே வியர்வையாக இருந்தது. தாகம் எடுத்தது. சுமார் 45 நிமிடங்களின் பின் சற்று நேரம் வாகனம்

0 comments :
Post a Comment