பிள்ளையானது வாகனம் விபத்தில் சிக்கியது. மூவர் பலி
முதலமைச்சர் பிள்ளையானது பாதுகாப்பு வாகனத்தொடரணியில் சென்ற வாகனம் ஒன்று இன்று காலை குருநாகல் பிரதேசத்தில் வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் மோதியதில் அவ்வாகனத்தில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்திற்கு உள்ளான வாகனத்தில் முதலமைச்சர் இருக்க வில்லை என தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட வாகனம் அதிவேகமாக சென்று அதன் கட்டுப்பாட்டை இழந்தே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
0 comments :
Post a Comment