பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுகின்றார். புதிய நியமனத்திற்காக ஆணைக்குழு.
பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ண எதிர்வரும் மாதம் 3 ம் திகதியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என அனைவரும் எதிர்பார்த்த போது அது சாத்தியமில்லை எனவும் நவம்பர் 3 அவர் ஒய்வு பெறுகின்றார் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றது.
அதே நேரம் பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதிவாய்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பலர் காணப்படுவதாகவும் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு அரசின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய ஆணைக்குழு ஒன்றை நியமித்து அவர்களின் சிபார்சின் பெயரில் நியமனத்தை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment