ஜெனரல் பொன்சேகா, ரணில் சிங்கப்பூரில் சந்திப்பு.
முப்படைகளின் பிரதான அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கரமசிங்க ஆகிய இருவரும் சிங்கப்பூரில் சந்தித்ததாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
கடந்த 24ம் திகதி அமெரிக்கா செல்வதாக புறப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கப்பூரில் உள்ள Crown Plaza Hotel லில் நேற்று முன்தினம் (25ம் திகதி) இரவு இச்சந்திப்பை மேற்கொண்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் கூட்டணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதே நேரம் அவர் நாட்டை விட்டு வெளியேறுதற்கு சற்று முன்னர் ஜாதிக்க ஹெல உறுமயவின் பாராளுன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் உடுவ தம்மாலோக தேரர் ஆகியோரையும் சந்தித்து பேசியதாக தெரியவருகின்றது.
எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படும்போது தாம் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக ஜேவிபி உட்பட பல கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் இச்சந்திப்பு பலரையும் விழிக்க வைத்துள்ளது.
அதே நேரம் அமெரிக்காவில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றிற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதன் பின்னணியிலும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.
0 comments :
Post a Comment