புதினம் சொல்ல இனி புதினம் இல்லை.
புலிகளின் முன்னணி இணையத்தளமான புதினம் தனது சேவையை தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. புலிகளின் சகல அராஜகங்களையும் நியாயப்படுத்தி வந்த குறிப்பிட்ட இணையம் பிரபாகரனின் மரணத்தின் பின்னர் கே.பி தரப்பினரை ஆதரித்து வந்தனர்.
கடந்த காலங்களில் அவ்விணையத்தில் வெளியாகியிருந்த வழுதி என்பவரின் கட்டுரைகளில் பிரபாகரனது கடந்த கால குறைபாடுகள் பல மறைமுகமாக விமர்சிக்கப்பட்டிருந்ததுடன் கே.பி யை புலிகளின் புதிய தலைவராக மக்களுக்குள் திணிப்பற்கான நோக்கம் கொண்டவையாகவும் இருந்தன. குறிப்பிட்ட கட்டுரைகள் வெளியானதை தொடர்ந்து புலிகளின் முன்னணி இணையத்தளங்கள் சில புதினம் வியாபார நோக்கம் கொண்ட ஓர் இணையம் எனவும் அதில் கட்டுரைகைளை எழுதியிருந்த வழுதி புழுதியை கிளப்புகின்றார் எனவும் சாடியிருந்ததுடன் அவ்விணையத்தளத்திற்கு நெடியவன் தரப்பினரால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
புலிகளின் நாடுகடந்த தமிழீழத்திற்கான பிரச்சாரப்பணிகளுக்கு புதினத்தின் பங்களிப்பை உருத்திரகுமார் கும்பல் பெரிதும் நம்பியிருந்தது. காரணம் பெரும்பாலான புலிகளின் ஊடகங்கள் நெடியவன் தரப்பினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் கடந்த காலங்களில், கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், இணையத்தளங்கள் யாவும் அரசின் பொய்பிரச்சார ஊடகங்கள் என கூறிவந்த புலிகளின் ஊடகங்கள் இன்று அப் பத்திரிகைகள், இணையங்களின் செய்திகளையே நம்பி இணையத்தளங்களை இயக்கி வருகின்றனர். கொழும்பில் இருந்து இயங்கும் சிங்கள, ஆங்கில இணையங்களின் செய்திகளை மொழிபெயர்த்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் இணையங்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் இணையங்கள் தனது சேவையை நிறுத்தும்போது தர்மசங்கடத்திற்குள்ளாவர்.
தே நேரம் மேல் குறிப்பிட்ட செய்திகளை ஒரு கால கட்டத்தில் பொய் எனவும் விசமப் பிரச்சாரம் எனவும் பிரச்சாரம் செய்த புலிகளின் ஊடகங்கள் தற்போது அச்செய்திகளையே மொழிபெயர்த்து தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவதானது இத்தனை காலமும் தாம் தமது இணையங்களினூடாக தமிழ் மக்களுக்கு வழங்கிவந்தது யாவும் பொய்யான தகவல்கள் எனவும் குறிப்பிட்ட இணையங்கள் பத்திரிகைகளில் வெளிவருபவையே நேர்மையான செய்திகள் என்பதை கூறுவதாகவும் கருதப்படுகின்றது.
0 comments :
Post a Comment