புதையல் தோண்டிய மதகுரு கைது
புதையல் தோண்டிய மதகுரு ஒருவரை அம்பலந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் அம்பலந்தோட்டை, வாதுருப்பு, தேரபுத்ர ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
மேற்படி புராதன விஹாரையிலுள்ள பல தொல் பொருட்கள் இந்த சம்பவத்தில் சேதமடைந்து ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு மதகுருவையும் பொலிஸார் தேடிவருகின்றனர்.
0 comments :
Post a Comment