பொய்த் தகவல்களை வழங்குகின்ற இணையத் தளங்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும்.
இலங்கை நிலவரங்கள் தொடர்பாக பொய்த்தகவல்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற இணையத்தளங்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்களை வெளியிடுகின்ற சுத்ந்திரம் இருக்கின்ற போதிலும் சில இணையங்கள் அண்மைக்காலமாக உண்மைக்கு புறம்பான செய்திகளை திட்டமிட்ட முறையில் வெளியிட்டுவருவதாகவும் அவை தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு அரச பத்திரிகைகளுடாக குறிப்பிட்ட இணையத்தளங்களின் பெயர்கள் வெளிவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment