Saturday, October 17, 2009

வவுனியாவில் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றவர் முன்னாள் புலி (சுப்புண்).

கடந்த இரவு வவுனியா சாமரக்குளம் பிரதேசத்தில் கொள்ளையடிப்பதற்காகச் சென்று மக்களால் சுற்றி வளைக்கப்பட்டபோது ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்ற நபர் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்று முறிப்பு. பிரதேசத்தை சேர்ந்த இவர் சுப்புண் எனும் பெயரில் வவுனியா மக்களினால் அறியப்பட்டிருந்தார். இவர் கடந்த காலங்களில் வவுனியாவில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமையை மக்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com