Tuesday, August 4, 2020

என்னதான் கொரோனா வந்தாலும் என்னை ஆதரித்துப் பிரதமராக்குங்கள் என்கிறார் சஜித்!

என்னதான் கொரோனா வந்தாலும், அதனைக் கருத்திற் கொள்ளாது வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை அளித்து, தன்னைப் பிரதமராக்குமாறு கோருகிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச.

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதித் தேர்தல் ஊர்வலம் கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார். தேர்தலில் இனிப் போட்டா போ்ட்டி போடுவன மொட்டுக் கட்சியும் தொலைபேசிக் கட்சியுமே.. ஏனைய கட்சிகளுக்கு அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார். பிரதமர்கள் கூட தலைநகரில் பிறந்திருந்தாலும் கூட அவர்களால் தலைநகருக்கு எந்தவொரு நன்மையும் கிட்டவில்லையே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com