Tuesday, August 4, 2020

ஸவுதியிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள 06 பேருக்கு கொரோனா தொற்று!

ஸவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கேற்ப, இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளரர்களின் எண்ணிக்கை 2,834 ஆகும். இன்றுடன் கொரோனா தொற்றிலிருந்து பூரண சுகமடைந்து தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளோரின் எண்ணிக்கை 2,524 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்றுவரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 299 ஆகும்.

கொரோனா தொற்று விடயத்தில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வின்படி கொரோனா வைரசானது விலங்குகளிலிருந்தே மனிதனுக்குப் பரவியுள்ளது எனத் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com