Thursday, July 3, 2025

ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்.. அல்பேட் ஜூலியன் (பாகம் 2)

நான் இப்போது ஒரு கும்மிருட்டான இடத்தில் நின்றிருந்தேன். அடர்த்தியான சோலை போன்ற உயர்ந்து வளர்ந்த மரங்கள். இருபத்தைந்து யார் தொலைவில் ஒரு பெரிய மாடி வீடு இருந்தது. அங்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அது ஒரு முகாம் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அங்கிருந்த புலிகள் தூக்கக்கலக்கத்துடன் இருந்தார்கள். என்னை அழைத்து வந்தவர் அங்கிருந்த முகாம் பொறுப்பாளர் நசீர் என்பவரிடம் என்னை ஒப்படைத்தார். இருபடிவங்களை நசீரிடம் கொடுத்து “பிரச்சனை இல்லை. அடிக்க வேண்டாம்” என மெதுவாக கூறியது என் காதில் விழுந்தது. இது எனக்கு மன ஆறுதலைக் கொடுத்தது. மேல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒர் அறைக்குள் தள்ளி விடப்பட்டேன். லைற் எரிந்து கொண்டிருந்தது. அறைக்குள் சுமார் இருபது பேர் வரை இருந்தார்கள். எல்லோரும் மிரண்டு போய் இருந்தார்கள். யாருமே எதுவுமே கதைக்கவில்லை. நான் ஓர் ஒரமாக உட்கார்த்தேன். ஒரிருவர் படுத்திருத்தார்கள். மற்றவர்களுக்கு படுக்க இடமில்லை. தேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. பக்கத்திலிருந்த கைதியிடம் பேச்சுக் கொடுக்கலாமென்றால் அவன் தூங்கிி வழிந்து கொண்டிருந்தான். எங்கோ தொலைவில் கோவில் மணி ஒசை கேட்டது. எனது பக்கத்துக் கைதி தூக்கம் கலைந்து எழுந்தார். "அண்ணே எப்போது எம்மை விடுவார்கள்” என கேட்டேன். அவர் கதைக்க வேண்டாம் எனவும் சைகை செய்து காட்டினார். நான் மெளனமானேன்.

கைது செய்யப்பட்ட நாலாவது நாள் பொழுது புலர்ந்தது. காலை ஒன்பது மணிபோல் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டு வெளியே எல்லோரும் அழைக்கப்பட்டோம். முகம் கழுவுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் அனுமதிக்கப் பட்டோம். எம்மை சூழ பல புலிகள் துப்பாக்கிகளுடன் காவல் நின்றார்கள். இப்போதும் கைவிலங்கு அகற்றப்படவில்லை. அங்கிருந்த எல்லா கைதிகளுக்கும் கைவிலங்கு போடப்பட்டிருந்தது. முகாமின் முன் முற்றத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டோம். அங்கு எல்லாமாக நாற்பது கைதிகள் இருந்தார்கள். எல்லோரும் முதல் நாள் இரவு அங்கு கொண்டுவரப்பட்டவர்கள் தான். நசீர் என்ற "புலிகளின் முகாம் பொறுப்பாளர் வந்து ஒரு மேசையின் முன் அமர்ந்து கைதிகளை ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் தொடங்கினார். எனது முறைவந்தது. எனது பெயர், முகவரி, தொழில் எல்லாம் கேட்டார். “டேய் உன்னை எதற்காக பிடித்தார்கள்” என கேட்டார். "தெரியாது" என்றேன். “நீ கம்மா இருந் தால் ஏனடா பிடிக்கிறார்கள். என்ன செய்தனி, EPRLF ஆதர வாளனா” எனக்கேட்டார். "நான் ஒரு இயக்கத்துக்கும் ஆதரவாளனல்ல" என்றேன். உடனே அவர் “நீ எல்லாம் ஏனடா தமிழனாய் பிறந்தாய் என” கூறி பெரிய ரீப்பை சட்டத்தால் அடித்தார். "நீ சுத்துறாய். (பொய் சொல்கின்றாய்) புலிப்படையை சாதாரணமாகவா நினைக்கிறாய். நீ சும்மா இருக்க உன்னை பிடிப்பதற்கு புலிப்படை ஒன்றும் முட்டாள்களல்ல, "எனக் கூறி மீண்டும் அடித்து முன்னைய அறையில் அடைத்தார்.

அன்று பகல் முழுவதும் ஒரு நேரச்சாப்பாடு மட்டுமே தரப்பட்டது. இரவு சுமார் முப்பது கைதிகளைத் தெரிவுசெய்து இரண்டிரண்டு பேராக இணைத்து விலங்கிட்டார்கள். கண்கள் கட்டப்பட்டது. நான் முதன் முதல் முகாமுக்குப்போகும் போது அணிந்திருத்த நீட்டுக்காற்சட்டையுடன் மட்டுமே நின்றேன். எனது சேட் எங்கென்றே தெரியவில்லை. எம்மைப் பிடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் புறப்பட்டது. சிறிய வாகன மொன்றில் முப்பது கைதிகளும் ஏற்றப்பட்டிருந்தோம். மிருகங்களைக் கூட அப்படி அடைத்து கொண்டு செல்ல முடியாது. நாம் மிருகங்களிலும் கேவலமாக புலிப்படைக் கொடியவர்களால் அழைத்துச் செல்லப்பட்டோம்.

சுமார் நாற்பதைந்து நிமிடம் வாகனம் ஒடி நின்றதும் எல்லோரும் இறக்கப்பட்டோம். கண்கட்டப்படடிருந்ததாலும் இருவரிருவராக விலங்கிடப்படடிருந்ததாலும் ஒழுங்காக இறங்கமுடிய வில்லை. அவர்கள் கூட்டிச் சென்ற பாதையால் நடக்கவும் முடிய வில்லை. நான் இருதடவை விழுத்தேன். கண் கட்டுக்களை கழற்றி விட்டார்கள். ஒரு பழைய காலத்து பெரிய வீட்டின் பின் பக்கத்தில் நின்றோம். நிலத்தில் தலை குனிந்தபடி இருக்கும்படி பணிச்கப்பட்டோம். நசீர் தலைமையில்தான் நாம் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தோம். சாள்ஸ் என்ற முகாம் பொறுப்பாளர் அங்கு நின்றார். அவர் உதவியாளர் டிஸ்கோ என்பவரும் உடனிருந்தார். சுமார் இருபத்தைந்து புலிகள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். கைதிகள் ஒவ்வொருவரினதும் தனித்தனி குற்றப் பத்திரங்கள் பொறுப்பாளர் சாள்சிடம் ஒப்படைக்கப்பட்டது. எம்மை ஒவ்வொருவராக அழைத்து குற்றப்பத்திரத்திலுள்ளவற்றை படித்து ஏளனமாகப் பார்த்து தூஷண வார்த்தைகளால் திட்டினார்கள். இப்படியாக ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து கேலி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுது விடிந்து விட்டது.

விடிந்ததும் நாம் இருக்கும் இடத்தின் சூழல் தெரியத் தொடங்கியது. சுமார் மூன்று ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியில் பழைய காலத்து மாடிவீடு ஒன்று இருந்தது. காணியின் பின் கோடியில் ஒரு பெரிய ஒலைக் கொட்டிலும் மத்திமப் பகுதியில் ஒரு சிறு ஒலைக் கொட்டிலும் காணப்பட்டது. எங்கோ பாடசாலை ஒன்றிலிருந்து எடுத்து வரப்பட்ட மேசைகளும் கதிரைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. காணியின் ஒரு கோடியில் மலம் கழிப்பதற்கு பாரிய கிடங்குகள் வெட்டப்பட்டு அவற்றின் மேல் தென்னங்குற்றிகள் போடப்பட்டிருந்தன. ஒரு பெரிய பாழடைந்த கிணறும் இருந்தது. இப்புதிய சூழலில் எனது சிறை வாழ்க்கை ஆரம்ப மாகியது. அங்கு சுமார் ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கைதிகள் ஒருவரோடு ஒருவர் கதைக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது. அப்படி இருந்தும் எம்மை கண்காணிக்கும் புலிகள் கவனிக்காத நேரத்தில் எமது கவலைகளை பரிமாறிக் கொள்வோம். நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம் முன்னாள் சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நவரத்தினத்தின் சாவகச்சேரியிலுள்ள வீடு என்பது பின்னர் தெரிய வந்தது. அவ்வீட்டைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட புலிகள் ஆயுதபணிகளாக இரவு பகல் காவலிலீடுபடுத்தப்பட்டிருந்தனர். இங்கு எமது விலங்குகள் அகற்றப்பட்டன.

சர்வகச்சேரி சாள்ஸ் முகாமுக்கு வந்த அடுத்த நாள் என்னிடம் இருந்த உடமைகள் எல்லாம் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டன. நான் கைது செய்யப்படும் போது என்னிடம் 1 பவுண் மோதிரம் ஒன்றும் பணமாக ரூபா எண்ணாயிரத்து முன்னூறும் இருந்தது. அத்துடன் எனது தேசிய அடையாள அட் டையும் இருந்தது. இவை எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. இம்முகாமில் இருந்த சுமார் ஆயிரம் கைதிகளில் பலருக்கு பொக்கிளிப்பான் நோய் கண்டிருந்தது. அவர்களை முகாமின் பின் கோடியில் அமைந்திருந்த ஒலைக் கொட்டிலில் காவல் வைப்பார்கள். அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் பலருக்கு வாந்தி பேதி நோய் ஏற்பட்டது. அவர்களுக்கு எவ்வித வைத்தியமும் இல்லை. மலசலம் கழிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததுடன் தண்ணி வசதியும் இல்லாததால் கைதிகளுக்கு சொறி, சிரங்கு, வாந்தி, பேதி என்பன இலகுவில் பரவ ஆரம்பித்தது. கைதிகள் நோயினால் பெரிதும் துன்புற்றார்கள்.

காலையில் முகம் கழுவ அனுமதிப்பார்கள். அதே நேரத்தில் மலமும் கழித்து முடித்துவிட வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழுமணிக்கிடையில் எல்லா கைதிகளும் இந்த வேலைகளை முடித்து விட வேண்டும். சுமார் ஆயிரம் கைதிகள் காலைக்கடன் முடிப்பதற்கு போதிய வசதி இல்லாத நிலையில் 1 மணி நேரத்தில் இது எப்படி சாத்தியமாகும். செய்ய முடியாதவர்கள் அடுத்த நாள் தான் செய்யவேண்டும்.காலை எட்டுமணிக்கு தேனீர் தருவார்கள். கைதிகளில் சிலர் தான் சமையல் கெய்வார்கள். காலை பத்து மணிபோல் கெளடபி சாப்பிடத் தருவார்கள். பின் மதியச்சாப்பாட்டுக்கும் இர வுச் சாப்பாட்டுக்கும் பதிலாக மாலை நாலு அல்லது ஐந்து மணி போல் சோறும் பருப்பு கறியும் தருவார்கள். கைதிகள் சாப்பிடு வதற்காக வாங்கும் சோறு சிறிதும் கொட்டக் கூடாது. அப்படி யாராவது குப்பையில் கொட்டியது கண்டு பிடிக்கப்பட்டால், கொட்டியவர் உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். அப்படி ஒத்துக் கொண்டால் அவருக்கு மூன்று நாட்களுக்கு சாப்பாடு இல்லை. ஒருவரும் ஒத்துக்கொள்ள வில்லையாயின் மறுநாள் ஒருவருக்கும் சாப்பாடு இருக்காது.

இங்கு விசாரணை என்ற பெயரில் ஏதேதோ நடக்கும். ஆரம்ப விசாரணை என்பார்கள். பூர்வாங்க விசாரணை என்பார்கள். ஒரு கைதி பற்றி தனிப்பட்ட முழுவிபரங்களும் எடுக்கப்படும். அத்துடன் அவர் பெற்றார், சகோதரர்கள் அனைவரினதும் விபரங்களும் பெறப்படும். குறிப்பிட்ட கைதியின் மீது குற்றப் பத்திரம் ஒன்று வைத்திருப்பார்கள். ஆனால் அதை சொல்ல மாட்டார்கள். நீ என்ன காரணத்துக்காக பிடிக்கப்பட்டாய் என கைதிகளையே கேட்பார்கள். சொல்லத் தெரியாத அப்பாவிக் கைதிகள் முழிப்பார்கள். விழும் அடி. விசாரணை செய்யும் போது கைதியின் கண்ணை கட்டி விடுவார்கள். எப்போ அடி விழும் என கைதிக்கு தெரியாது. அடிவிழும் போது கைதி துடிப்பார்.

சில கைதிகளை விசாரிக்கும் போது அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை நானும் அறியக் கூடியதாக இருந்தது.

தொடரும்..



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com