Wednesday, July 15, 2020

மகிந்தானந்த இன்று நீதிமன்றம் செல்லாததற்குக் காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில ஈடுபட்டமைக்காக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நீதிமன்றில் இன்று ஆஜராக வேண்டியிருந்தும், அவர் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.

அவருக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, அவரது வழக்கறிஞர், கொரோனா பாதுகாப்புக் கருதியும், சுகாதார நடைமுறைகளைக் கருத்திற்கொண்டும் மகிந்தானந்த அலுத்கமகே வரவில்லை எனக் குறிப்பிட்டார்.

வழக்கறிஞரின் கருத்திற்குச் செவிசாய்த்தநீதிபதி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் அந்த வழக்குத் தொடரப்படும் எனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com