Wednesday, July 15, 2020

கொரோனா தொடர்பில் அரசாங்கம் இதுவரை பூச்சாண்டியே காட்டி வந்தது! - ஹரீன்

கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம் இதுவரை பூச்சாண்டியே காட்டி வந்த்து எனவும் அறிக்கைகள் அனைத்தும் பொய்யானவை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற
ஹரீன் பிரனாந்து குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஶ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தினால் கொரோன தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரை நோயற்றோராகவே அரசாங்கம் அறிவித்த்து. தற்போது இலங்கையில் கொரோனா இரண்டாவது பேரலையும் தலைக்கு மேல் வந்துவிட்டது. ராஜபக்ஷ குடும்பத்தினர் தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com