Monday, July 27, 2020

ரிஷாதின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான மனு ஆகஸ்ட் 5 இல் விசாரணைக்கு!


சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் தன்னைக் கைது செய்வதை நிறுத்துமாறு கோரி தடையுத்தரவு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்திீன் முன்வைத்துள்ள மனுவினை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு முடிவு செய்துள்ளது.

இன்று இந்த மனுவினை ஆராய்ந்து பார்த்த போது மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராகவிருந்த பிரியந்த ஜயவர்த்தன, தான் தனிப்பட்டதொரு விடயம் காரணமாக இந்த மனு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவி்த்தார். யஸந்த கோதாகொட, எல்.டி.பீ. தெஹிதெனிய என்ற இருவருமே மூன்றுபேர் கொண்ட நீதிபதிகளில் ஏனைய இருவருமாவார்கள்.

தன்னைக் கைது செய்வது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்று தீர்ப்பு வழங்குமாறே ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com