Tuesday, June 2, 2020

வெகு விரைவில் தேர்தலை நடாத்துவோம்! மஹிந்த தேசப்பிரிய

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார்.

ஆணைக்குழுவின் வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். உலகளாவிய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொது மற்றும் மாகாண சபை தேர்தல்கள் மிகவும் கவனமாக் கோரோனா தொற்றுநோய்க் காலப்பிரிவில் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் வரைவு வழிகாட்டுதல்களின்படி பொதுத் தேர்தலை விரைவில் நடத்த சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர் எனவும் சுகாதார ஊழியர்ளை வாக்குச் சாவடிகளுக்கு நியமித்தல் மற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் வாக்குச் சாவடிகளை மேற்பார்வை செய்தலுக்காக நியமிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்கலாம் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com