Tuesday, June 2, 2020

வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

வாக்குச் சீட்டுகளின் அச்சிடுதல் இன்று (2) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களாதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடி 70 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன. கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக ஊழியர்களைப் பஙகேற்கச் செய்வதில் சிற்சில சிக்கல்கள் இருந்தாலும், வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் அச்சகத் திணைக்களாதிபர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com