Tuesday, June 2, 2020

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வௌியானது

பாராளுமன்றை கலைத்தல் மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் உயர்நீதிமன்றில் 10 நாட்களாக பரிசீலிக்கப்பட்ட நிலையில் குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பான தீர்ப்பு இன்றைய தினம் (02) அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் நேற்று (01) அறிவித்திருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com