Saturday, December 21, 2019

பிள்ளையானை விடுவிக்குமாறு மஹிந்தரிடம் கோரியுள்ளாராம் கருணா!

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமர் மஹிந்தவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(20) மாலை மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பொதுமகன் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்:

திருகோணமலையில் எங்கள் கட்சியின் கட்டமைப்பு முன்னெடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் பிள்ளையானின் விடுதலைக்கு பலமுயற்சிகளை மேற்கொள்பவன் நான். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பது தான் இலக்கு என குறிப்பிட்டார்.

புலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்துவந்தபோது, உடன்வந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனிக்கட்சி அமைத்ததும் பின்னர் கருணாவும் பிள்ளையானும் அரசியல் எதிரிகளாக செயற்பட்டுவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com