Saturday, December 21, 2019

அவசர சந்திப்பில் கோட்டா-மஹிந்த-மைத்ரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி உடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அதேவேளை, பிரதமர் உடனான சந்திப்பானது அளரிமாளிகையில் நடைபெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது பற்றி இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இறுதி முடிவு இந்த இரண்டு சந்திப்புக்களிலும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் சந்தித்து பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com