அநுரகுமார கட்சித் தலைமையிலிருந்து ராஜனாமா செய்கின்றார்!
ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கட்சி தலைமைப்பதவியை ராஜனாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுற்றவுடன் கட்சியின் அரசியல் பீடம் ஒன்றுகூடி தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்துள்ளது. இதன்போது அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தான் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரியப்படுத்தியுள்ளார்.
தனது ராஜனாமா கடிதத்தினை கட்சியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா அவர்களிடம் அவர் வழங்கியுள்ளாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அவ்வாறு அவர் செயற்பட்டிருப்பாராக இருந்தால் அனுரகுமாரா திஸாநாயக்க இந்நாட்டின் அரசியல் கலாச்சாரத்திற்கு புதியதோர் அத்தியாயத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும் கட்சியின் புதிய தலைமைக்கு இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஒரு தரப்பினர் கே.டி லால் காந்தவை முன்மொழிந்துள்ள அதேநேரம், கட்சிக்கு இளம் தலைமை ஒன்று தேவைப்படுவதன் தேவையை விளக்கிய அனுரகுமார திஸாநாயக்க விமல் ரத்நாயக்கவை நியமிக்கலமாம் என முன்மொழிந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment