முள்ளிவாய்காலுக்கு கல் எடுத்துச்சென்ற பாதிரி லியோ ஆம்ஸ்றோங்குக்கு சில்லாலையில் கல்லெறி!
கடந்த 12. மே 2021 இல் முள்ளிவாய்காலுக்கு நினைவுக்கல் எடுத்துச் சென்று பிரபலமானவர் பாதிரி சின்னத்துரை லியோ ஆம்ஸ்றோங். இவர் தற்போது பண்டத்தரிப்பு பிரதேசத்தில் சில்லாலையில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் போதகராக கடமை புரிகின்றார். அண்மையில் குறித்த ஆலயத்தை சுற்றிவளைத்த பிரதேச மக்கள் ஆலயத்தை நோக்கி கற்களை வீசி பாதிரிக்கு எதிரான பலத்த கோஷங்களை எழுப்பி எதிர்ப்பார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
பாதிரி சின்னத்துரை லியோ ஆம்றோங் சிவில் சமுக செயற்பாட்டாளராக தன்னை காட்டிக்கொள்கின்றார். ஆனாலும் அவர் பிரதேசத்தில் பல்வேறு சமுகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களுடன் உறவில் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த சமுகவிரோதிகள் மதுபோதையில் ஆராதனை நேரங்களில் ஆலயத்துள் நுழைவதுடன் அங்கு வருகின்ற பெண்கள் குழந்தைகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதாக பலமுறை அருட் தந்தை அவர்களிடம் முறையிட்டபோதும், அவர் சமுகவிரோதிகள் மதுபோதையில் ஆலயத்தினுள் நுழைவதை தடுக்க எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் பாதிரியாரின் மேற்படி செயற்பாட்டை கண்டித்து ஆலயத்தை சுற்றி வளைத்து பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கற்களையும் ஆலயத்தை நோக்கி வீசியுள்ளனர்.
ஒரு சிவில் சமுக செயற்பாட்டளாராக , மத போதகராக சமுக சீர்கேடுகளுக்கு எதிராக செயற்படவேண்டிய பாதிரியார் அவற்றை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் முள்ளிவாய்கால் நினைவேந்தல் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவரான பாதிரியாரின் இச்செயற்பாடு குறித்த கட்டமைப்பின் செயற்பாட்டின் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது. அமைதியையும் தேவனின் கருணையையும் நாடிச் செல்லும் அடியார்கட்கு அமைதியான ஆராதனைச் சூழ்நிலையை அமைத்துக்கொடுக்க முடியாத பாதிரியால் முள்ளிவாய்காலில் இறந்த மக்களுக்கு எத்தகைய நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்ற யேசுபிரானின் போதனையை எடுத்துரைக்க வேண்டிய பாதிரி ஆம்ஸ்றோங், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான தனது வேண்டுதலில் முள்ளிவாய்கால் நிகழ்வுக்கு காரணமான அத்தனைபேரும் தண்டிக்கப்படவேண்டும் என நாம் எங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments :
Post a Comment