Saturday, November 9, 2019

அடிப்படைவாதிகளின் கழுத்துக்களில் ஏறாமல் சீரிய வழிச்செல்ல தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே இயலும்! - அநுர

அடிப்படைவாதத்தையும், இனவாதத்தையும் நாட்டிலிருந்து இல்லாதொழித்தால் மட்டுமே நாட்டைச் சீரிய பாதையில் காெண்டு செல்லவியலும். அதனை தேசிய மக்கள் சக்தியினால் மட்டுமே செய்யவியலும்... என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அம்பலங்கொடையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக. இருப்பது அடிப்படைவாதம் எனவும், தேசிய பாதுகாப்பின் ஸ்தீரத்தன்மையை உறுதியுடையதாக மாற்ற வேண்டுமானால் அடிப்படைவாதத்தையும், இனவாதத்தையும் பூண்டோடு அழிக்க வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அடிப்படைவாதத்தையும் இனவதத்தையும் அழிக்க இயலுமான ஒரேயொரு அரசியல் மேடை தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடையே என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு அடிப்படைவாதியினதும் கழுத்திலும் ஏறாது, மக்களிடத்துச் செல்லவியலுமான ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர் மிகவும் தெளிவான முறையில் எடுத்துச் சொன்னார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com