Friday, November 8, 2019

மாெட்டுக்கட்சி விரும்பாவிட்டாலும் கோத்தாவின் வெற்றியின் புகழ் ஸ்ரீசு கட்சியையே சாரும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ பெறவுள்ள வெற்றியின் அனைத்து பாரிய கெளரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டு்ளளார்.

'தேசத்திற்காக கோத்தபாயவுடன் கரங்களைப் பிணைப்போம்' எனும் கருப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தெஹிவளையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று சேராது விட்டால் இரு கட்சியும் காணாமற் போய்விடும். சென்ற ஐந்தாண்டுகள் பற்றிய புத்தகம் ஒன்று எழுதினால் நோபல் பரிசு கிடைக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதாரவாளர்கள் செய்கின்ற அன்பளிப்பு என்னவென்றால், நாட்டின் வெற்றிக்கு, செளபாக்கியம் அவசியமாகின்றது. வெற்றியின் முழு கெளரவமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும். மொட்டுக் கட்சி இதனை விரும்பாது. என்றாலும் உண்மை அதுதான்'

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com