Friday, November 8, 2019

சஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்

தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் 60% இற்கும் மேலாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாவலப்பிட்டி மகிந்தானந்த அறக்கட்டளை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் உரையாற்றும்போது:

'புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் மற்றும்கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ 60 வீதத்திற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவையும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சேற்றினைப் பூசுவதற்கு பணத்தை இறைத்துக்கொண்டிருக்கின்றது. 21 ஆந் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் நடாத்திய ஸஹ்ரானின் மனைவியின் விஷேட உரையொன்றுடனான காணொளியொன்றைத் தயாரித்து எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஒளி - ஒலிபரப்ப இருக்கின்றது. அதன்மூலம் ஸஹ்ரான் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ இருவருடனும் சிநேகபூர்வமாக இருந்துள்ளனர் என்பதை வெளிக்காட்டவுள்ளனர்.

இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரியிருந்தார். எங்களுக்கு எவ்விதத்திலும் இரண்டாவது விருப்பு வாக்குத் தேவையில்லை. 21 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புற்ற எவரது அநுசரணையும், ஒத்துழைப்பும் இந்தத் தேர்தலில் எங்களுக்குத் தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெளிவாகவே கூறியிருக்கின்றார்.

சிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களது வாக்குகளை நாங்கள் பிச்சையாக ஏற்க மாட்டோம் என, கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதாக அமைச்சர் ராதா கிருஷ்ணன் கூறியிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ஷ ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் மலையக வாக்குகள் தற்போதை அரசாங்கம் ஆட்சிக்கு வர வாக்குகளை வழங்கின.

வடக்கிற்கு அரசியல் தீர்ப்பு வழங்கப்படவில்லை. மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதனால் வடக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகள் இம்முறை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கவே அப் பிரதேச மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், அம்மக்களின் எண்ணப்பாடுகளை மாற்றுவதற்காகத்தான் அமைச்சர் ராதா கிருஷ்ணன் இவ்வாறான செய்திகளைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கின்றார்.' எனக் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com