Saturday, November 9, 2019

ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வுபெறும் உத்தியோகபூர்வ நாள் எதிர்வரும் 14!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமான முறையில் ஓய்வுபெறுவதையடுத்து எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்று காலை 11.00 க்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்படவுள்ளதுடன், சிறுவர்களுக்கான விசேட லாெத்தர் ஒன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் அன்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் கடமையாற்றியோருக்கு பகல் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகாெள்ளும் இறுதி அமைச்சரவைச் சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com