Tuesday, November 12, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கோத்தாவின் கைங்காரியமாம்! நாடெங்கிலும் எதிர்ப்பார்பாட்டத்திற்கும் ஏற்பாடு !

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவே எனக்கூறி ஐக்கிய தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நகரங்கள் பலவற்றில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

எதுஎவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத் தேர்வுக் குழு மற்றும் ஜனாதிபதியின் விஷேட விசாரணை ஆணைக்குழு மூலம் இதுவரை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படவில்லை.

நூற்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தத் தாக்குதல் தொடர்பில் அபாய எச்சரிக்கைகள் மேலிடங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், ஒருவரும் இதுதொடர்பில் அக்கறை காட்டாமலிருந்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்துள்ளமை தெரிந்ததே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com