Friday, November 29, 2019

சுவிஸ் குற்றச்சாட்டுக்கு பிரதமரின் பதில்...

சுவிட்சர்லாந்து தூதுவராலய பெண் அதிகாரியொருவரைக் கடத்திச் சென்றமை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி தொடர்பிலான விசாரணைகளுக்கு தூதுவராலயத்தின் எந்தவித ஒத்தாசையும் இதுவரை கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

அதேவேளை இன்று நீர் வழங்கல் வசதிகள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார இன்று (29) தனது அமைச்சில் அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்றவேளை, அரசாங்கத்தை சிரமத்திற்குள்ளாக்குவதற்காக செய்யப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட அமைப்பினரால் செய்யப்பட்டுள்ள மிக மோசமான செயற்பாடு இதுவென விவரித்தார்.

நீர் வழங்கள் வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற வாசுதேவ நாணயக்கார இன்று அவ்வமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

அவ்வமைச்சின் அமைச்சராகக் கடமையாற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com