Friday, November 29, 2019

ஐதேக வசமான பகுதிகள் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வசமாகும்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மீதமாகவுள்ள மாகாண சபைகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமாகும் என உறுதியாகச் சொல்ல முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கலாச்சக்கரம் பற்றி தான் இதற்கு முன்னரேயே தெரிந்து வைத்ததாகக் குறிப்பிடும் விஜயதாச, இனி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியைக் கட்டியெழுப்ப எவராலும் இயலாது எனவும் குறிப்பிட்டார்.

கட்சித் தலைமைப் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்வதற்கு ஆளுக்கு ஆள் உள்ளே குத்திக்கொள்கிறார்கள் எனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏனையோர் பெற முயற்சிப்பது நடக்கவியலாத காரியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com