Friday, November 29, 2019

மக்கள் நிராகரித்தவர்களுக்கு ஏன் இராஜாங்க அமைச்சு....? கேள்விக்கணை தொடுக்கிறார் கெவிந்து!

சென்ற பொதுத்தேர்தலின் போது தோல்வியைத் தழுவிய, தேசியப் பட்டியலில் மந்திரிப் பதவியைப் பெற்றுக்கொண்டோருக்கு, புதிய அரசாங்கத்தில் இராஜங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்காெள்ள முடியாது என 'யுத்துகம' அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரத்துங்க தெரிவித்தார்.

இன்று (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"தேசிப் பட்டியலைத் திருடினார்கள். மக்கள் நிராகரித்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கினார்கள். அவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குவது பிழையாகும்" எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com