Thursday, November 14, 2019

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே ஸ்ரீசுக தலைமை மைத்திரி வசம்!

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளிவந்த உடனேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் அமர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாச குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எடுத்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டார்.

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ஆவன செய்வார் என, அக்கட்சியின் பதில் தலைவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயற்பாடுகளை மேற்கொள்வார் எனவும் பதில் தலைவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com