Friday, November 15, 2019

இன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை! - தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்குப் பொலிஸ் பிணை வழங்கக்கூடாது எனவும், அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் சிறந்த முறையில் நடைபெற வேண்டும் என்னும் நோக்கிலேயே இந்த வேண்டுகோளைத் தான் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் பலத்தை ஆயுதங்களினாலும் வன்செயல்களினாலும் காட்டாமல் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்கைப் பயன்படுத்தியே தங்கள் பலத்தைக் காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com