Friday, November 15, 2019

போலி வாக்குச்சீட்டுக்கள் 58 உடன் சாரதியொருவர் கைது!

வாக்குப் பெட்டிகளை விநியோகிப்பதற்காக ஹம்பாந்தோட்டை சுஷி தேசிய பாடசாலைக்கு வந்த வேன் ஒன்றிலிருந்து வாக்குச் சீட்டுடன் ஒத்ததான போலி வாக்குச் சீட்டுக்கள் 58 இன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சாரதி கைது செய்யப்பட்டதாகவும் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமயமகம் தெரிவித்தது.

முல்கிரிகல தேர்தல் தொகுதியில் இத்ததெமலிய வாக்குச் சாவடிக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிப்பதற்காக வாக்குச்சாவடிப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் உதவியாளர் இந்த வாக்குப் பெட்டியை எடுத்துக்காண்டு வாகனத்தினுள் நுழைந்துள்ளனர். அங்கு வாகனச் சாரதியின் ஆசனத்திற்கு அருகில் இருந்த இந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுத்துள்ளனர் என ஹம்பாந்தோட்டை மாவட்ட வாக்குக் கணிப்பதிகாரி எம்.கே. பந்துல ஹரிச்சந்திர குறிப்பிட்டார்.

போலி வாக்குச் சீட்டில் எந்தவிதக் குறியீடுகளும் அடையாளமிட்டிருக்கவில்லை எனவும், சீட்டின் கீழ்ப்பகுதியில் வாக்காளர்களைத் தெளிவுறுத்துவதற்காக மட்டுமே என அச்சிடப்பட்டிருந்தாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதனால் வேறொரு வாகனத்தின் மூலம் குறித்த வாக்குச் சாவடிக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள வாகனச் சாரதி திஸ்ஸமகாராம மோல கெபு பதான பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த வாகனமானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சார நடிவடிக்கைகளுக்காக கூலிக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டது என வாகனச் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com