Thursday, October 31, 2019

கோத்தா வந்தால் டக்கிளஸின் கை ஓங்கப்போவதாக சிறிதரனுக்கு வயிற்றோட்டம்.. தமிழரசு முகநூல் வால்களிடம் புலம்பலாம்..

எதிர்வரும் தேர்தலில் தங்களுக்கு சார்பான அல்லது வசதிவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம் எனக் கருதுகின்ற வேட்பாளரை வெல்லவைப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் தேசம் எங்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைமுகமாக சஜித்தை ஆதரித்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

ஆனால் சஜித் பிறேமதாஸவிற்காக நேரடியாக பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்ற கிளிநொச்சி கட்டப்பஞ்சாயத்து தலைவன சிறிதரன் தனது முகநூல் வாரிசுகளை அழைத்து எச்சரிக்கை மணி அடித்துள்ளார். அவர் அவ்வாறு எச்சரிக்கை மணி அடித்தபோது அவரது வயிற்றில் கலக்கம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தாக சிறிதரனுடன் சந்திப்பில் கலந்து கொண்ட அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று 30.10.2019 ம் திகதி பிரதேசத்திலுள்ள முகநூல் வில்லாதிவில்லர்களை இரகசியமாக அழைத்து எச்சரிக்கை மணி அடித்த சிறிதரன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ஜனாதிபதியாக வந்தால் அடுத்த கட்டமாக மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி அமைய வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு ஆட்சி அதிகாரத்தை மகிந்த தரப்பு கைப்பற்றினால் வடக்கில் டக்ளஸ் தேவானந்தவின் கை ஓங்கும். அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டு வடக்கில் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடும். இதனால் வறுமையிலும், வேலை வாய்ப்புகள் இன்றி இருக்கும் மக்கள் டக்ளஸ் பக்கம் திரும்பிவிடுவார்கள்.

இதனால் நாம் கட்சி நடத்த முடியாத நிலை ஏற்படுவதோடு கூட்டமைப்பு எம்.பிமார் வீடுகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்று முடித்தபோது சிறிதரனுக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துவிட்டது என தாங்கள் உணர்ந்து கொண்டதாக அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறன நிலை எமக்கும் எமது கட்சிக்கும் ஏற்படாமல் இருக்க கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு எதிராகவும் சஜித்திற்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யுமாறு சிறிதரன் தழிழரசுக் கட்சியின் முகநூல் வல்லுனர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் 60 வீதமாக பிரச்சினைகள் தீர்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவோடு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு சிறு துரும்பை கூட இவர்களால் நகர்த்த முடியவில்லை என்பதுடன் தமிழர்களின் கலாச்சார சின்னங்கள் சமயஸ்தலங்கள் போன்றன திட்டமிட்டு அழிக்கப்பட்டிருப்பதோடு இந்துக்களின் கோவில்கள் சுடுகாட்டுக்கு சமம் என்று இவ் நல்லாட்சி அரசால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் தங்கள் சுயலாப அரசியலுக்காகவும் தமிழ் மக்களை பகடைகாயாக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டவேண்டியது காலத்தின் தேவையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com