Thursday, October 31, 2019

மாநாயக்க தேரர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை பாரமளித்தார் சஜித் பிறேமதாஸ.

' சஜித் சமூக புரட்சி' எனப் பெயரிடப்பட்டுள்ள சஜித் பிறேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கண்டி, குயின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு முன்னராக அதன் முதல் பிரதி மல்வத்து மகாநாயக்கர், அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com