Friday, November 1, 2019

எதிர்வரும் தேர்தலில் நாம் யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? கத்தோலிக்க பேராயர் சம்மேளனம்

அனைத்து மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கும் நாட்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒருமைப்பாட்டுடன் செயல்படும் பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து குடிமக்களும் புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கட்சி அரசியலுக்கு அப்பாற்சென்று ஜனாதிபதி செயற்பட வேண்டும் எனவும் கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கையாென்றில் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மிருகத்தனமான தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரவும், மத தீவிரவாதத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிக்கவும், நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் மதங்களிடையே அமைதியான சகவாழ்வை ஏற்படுத்தவும் அனைத்து தலைவர்களும் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்படவுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நாட்டின் நிலையான அபிவிருத்திக்காக மத சுதந்திரம், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான தேசிய கொள்கைகளை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com