Wednesday, September 25, 2019

பிரபாகரனின் வீட்டிற்குச் சென்று அழுது புலம்பிய நடிகர் சதீஸ் பற்றி விசாரணை!

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஸ் குமார் யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள பிரபாகரனின் வீட்டிற்குச் சென்று அழுது புலம்பியுள்ள விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எம். சதீஸ் குமார் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் (23) போய், பிரபாகரனின் வீட்டு முன்றலிற்குச் சென்று இவ்வாறு அழுது புலம்பியுள்ளார்.

பிரபாகரனின் வீட்டிற்குச் செல்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை எனவும், அவர் எந்த நோக்கத்திற்காக இங்கு வந்தார் எனவும், அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்தவர்கள் யாவர் எனவும், ஆராய்வதற்காகவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
.
இந்த நடிகர் மாத்திரம் பிரபாகரனின் வீட்டுக்கு முன்னால் சென்று அழுது புலம்புவதை, அந்தப் பாதை வழியே சென்றோர் பார்த்து 'இவனுக்குப் பைத்தியம்' என்று கூறிச் சென்றுள்ளதுடன், சில நிமிடங்களுக்குப் பின்னர் குறித்த நபர் சதீஸ் குமார் என்பதைத் தெரிந்துகொண்ட ஒருவர் அவருடன் கதைத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com