Wednesday, September 25, 2019

சிறிதரன் ஆடைகளை களைந்துவிட்டு ரணிலுக்கு பின்னால் ஒழிந்து நிற்கின்றார். சாடுகின்றார் அங்கஜன் ராமநாதன்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் இருவரும் இணைந்து தங்களின் இருப்புக்களை பாதுகாப்பதற்காக மக்களை பிழையான வழிகளில் வழிநடத்துகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குஞ்சுபரந்தன் பகுதியில் உப்பளம் அமைக்கப்படுவதனால் தங்களிற்கான தொழில் வாய்ப்பு உருவாக்கி வாழ்வாதாரம் சிறப்பாக அமையும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தாங்கள் பயனடைகின்றோம் என்றும் சிங்கள கம்பனி இலங்கையில் உள்ள சடத்தின்படிதான் முதலீடு செய்துள்ளது நாட்டின் சட்ட நியதிகளுக்கு கீழ்தான் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது சிங்களவருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்று இவர்கள் அடாவடித்தனம் செய்கின்றார்கள்

ஆனால் பாராளுமன்றத்தால் வாகன அனுமதிப்பத்திரம் கௌரவ ஸ்ரீதரன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்றது என்றும் இதனை அவர் சிங்களவருக்கு விற்று பணம் பெற்று தான் வாழலாம் நாங்கள் தெருவில் நிற்க வேண்டுமா கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் ஒன்றாக நின்று அத்திவாரம் இடலாம் ஆனால் நாங்கள் மட்டும் சிங்கள கம்பனிகளுக்கு ஆதரவு வழங்க கூடாது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரீதரன் அவர்கள் ஆடைகளை களைந்துவிட்டு ரணிலுக்கு பின்னால் நிற்கின்றார் என்று கரைச்சி பிரதேச சபையினால் குஞ்சுப்பரந்தன் பிரதேச மக்களிற்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது கரைச்சி பிரதேசசபை தவிசாளரின் பொய்யான சொல்லினை கேட்டு மக்களிற்கான குடிநீரினை வழங்காமல் நிறுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர்

வடக்கில் ஆளுநரின் அதிகாரங்களிற்கு உட்பட்டு அமைச்சுக்கள் இருக்கின்ற போது இவர்கள் இருவரினதும் அடாவடித்தனத்தினால் மக்களிற்கான குடிதண்ணீர் வழங்காமல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. அத்தியவசிய தேவைகளில் ஒன்றான குடிதணீர் தேவையினை உடனடியாக மக்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கின்றேன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com