Tuesday, September 10, 2019

தாமரை மொட்டுக் குறியீட்டை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம்...!

எக்காரணத்திற்காகவும் யார் என்ன சொன்னாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது தாமரை மொட்டுக் குறியீட்டை மாற்றமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.

இன்று (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் தாமரை மொட்டுக் குறியீட்டை மாற்ற மாட்டோம். அதற்கு உடன்படவும் மாட்டோம். தாமரை மொட்டென்பது இந்நாட்டு மக்களை வெற்றியின்பால் கொண்டு செல்லும் குறியீடாகும். அதனால் எவ்வாறான தலையீடுகள் வந்தாலும் எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் நாங்கள் தாமரை மொட்டுக் குறியீட்டை மாற்ற மாட்டோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com