Wednesday, September 11, 2019

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 11 முஸ்லிம் பயங்கரவாத சந்தேக நபர்கள் ரிஐடி யிடம் ஒப்படைப்பு.

அம்பாறை மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் 11 உறுப்பினர்கள் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள மேற்படி இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மேற்படி நபர்கள் அரச புலனாய்வுத் பிரிவினர் வழங்கிய தகவல்களின் பிரகாரம் அம்பாறை விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபர்களின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தெளிவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக 11 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த மாதம் 3ம் திகதியிலிருந்து ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் அம்பாறை விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன் அதில் ஒருவர் அனுராதபுர மாவட்டத்திற்கான தலைவராக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com