ஆயுதபலத்தால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது -சஜித் பிரேமதாஸ
இராணுவபலம் மற்றும் ஆயுதங்களினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. ஆயுதபலம், இராணுவம் பலம், உளவுத் துறையினர் ஒரு நாட்டுக்கு முக்கிய தேவையாகவுள்ளது. இது தொடர்பில் எவ்வித தர்க்கங்களும் மாற்றுக் கருத்துக்களும் தேவையில்லை என வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் சிப்பிக்குளம் கிராமத்திலுள்ள ரஹூமானிய்யா அஹதிய்யா பாடசாலைக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
நாட்டின் சகல இனத்தினற்கும் மதத்திற்கும் ஒன்றாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி அவர்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போன்று வாழ்வதற்கான சூழலினை ஏற்படுத்த வேண்டும்.
இன்று நாட்டினுள் பாரியதொரு விவாதம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக நாம் மிகவும் முக்கியமான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இராணுவபலத்தினால், ஆயுதங்களினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. ஆயுதபலம், இராணுவம் பலம், உளவுத் துறையினர் தேவையாகவுள்ளது. இது தொடர்பாக எவ்வித தர்க்கங்களும் மாற்றுக் கருத்துக்களும் தேவையில்லை.நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுடனும் சகல சமயத்தவர்களுடனும் தொடர்புடையவர்கள் என்பது சகல பிரசைகளின் இதயத்திற்கும் விளங்க வேண்டும். இனத்தினால், மதத்தினால் நாம் இன்னல்களுக்கு ஆளாகவில்லை.
இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அறநெறிக் கல்வியினை தொடர்வதற்கு வசதியற்றிருந்த சிறார்களுக்காக இந்த கட்டிடத்தினை நிர்மாணித்து கொடுத்ததினூடாக தற்பொழுது அவர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி சமய கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது இதற்காக எனக்கு ஒத்துழைப்பினை வழங்கிய பிரதேச அரசியல் வாதிகள் உட்பட நன்கொடையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

0 comments :
Post a Comment